பிரபல இயக்குநர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!!

1994-ம் ஆண்டு வெளியான ‘இலையும் முள்ளும்’ படத்தின் மூலம் பிரபலமானவர் கே.பி.சஷி. இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதுமட்டுமின்றி இவர் புகழ்பெற்ற ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் எழுத்தாளரும், கம்யூனிஸ்ட் சிந்தனையாளருமான கே தாமோதரனின் மகன் ஆவார்.
1970-ல் ஜேஎன்யுவில் படிக்கும் போது கார்ட்டூன் துறையில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. இவர் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படமான ‘ஏக் அலக் மௌசம்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் நந்திதா தாஸ், அனுபம் கேர் மற்றும் ரேணுகா ஷஹானே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரபல மலையாள நடிகர் கோபியும் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
இவ்வாறு பல்வேறு மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் கே.பி.சஷி உடல் நலக் குறைவு காரணமாக திருச்சூரில்உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு மலையாள திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரது மறைவுக்கு நடிகர்கள், திரையுலக பிரபலங்கள், தலைவர்கள், ரசிகர்கள், நண்பர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.