3 மாநில சூப்பர்ஸ்டார்கள் இணையும் முதல் படம் ஜெயிலர்..?

 
1

‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், வசந்த் ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார்.

Jailer

இப்படத்திற்கான கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது படம் பற்றிய ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. தமிழில் முன்னணி வர்த்தக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஜெயிலர் படத்தில் மோகன்லால் கெஸ்ட் ரோலில் தோன்றுகிறார். மோகன்லால் ஓரிரு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் இருப்பார் என்றும் அவருக்கு ஒரு சிறிய வேடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இது நடந்தால் மோகனலால் - ரஜினிகாந்த இணையும் முதல் படம் ஜெயிலர். மேலும், மூன்று மொழிகளின் சூப்பர் ஸ்டார்கள் இணையும் முதல் படம் என்ற பெருமையையும் ஜெயிலர் படம் பெறும். ஏற்கனவே ஜெயிலர் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web