இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுலுக்கு இந்த நடிகையுடன் விரைவில் திருமணம்..!!  

 
1

கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நடிகைகளை காதலிப்பது வழக்கமானதுதான். ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள், நடிகைகளையே திருமணம் செய்துள்ளனர். அந்த வரிசையில், தற்போது கேஎல் ராகுலும் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுலும், பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியின் மகளான நடிகை அதியா ஷெட்டியும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வருகின்றனர். சுனில் ஷெட்டி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

Rahul-Athiya

கடந்த சில நாட்களாக அவர்களின் திருமணம் குறித்து வசந்திகள் உலா வந்த நிலையில், நடிகை அதியா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் அடுத்த 3 மாதங்களில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து இந்தியா டூடே வெளியிட்டுள்ள செய்தியில், அதியா ஷெட்டி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அடுத்த 3 மாதங்களில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். அதற்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்னும் மூன்று மாதங்களில் மும்பையில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் சந்தித்து அத்தியா மற்றும் ராகுல் வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது.

Sunil-shetty

கடந்த ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் குறித்த வதந்திகள் பரவின. அப்போது, சுனில் ஷெட்டி வதந்திகளுக்கு பதிலளிக்கையில், “அவள் என் மகள், அவள் எப்போதாவது திருமணம் செய்து கொள்வாள். என் மகனுக்கு எவ்வளவு சீக்கிரம் திருமணம் நடக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது அவர்களின் விருப்பம். கே.எல்.ராகுலைப் பொறுத்த வரையில், நான் பையன். காலங்கள் மாறிவிட்டதால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். அவர்கள் முடிவு எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்களுக்கு என் ஆசிகள் எப்போதும் உண்டு” என்றார்.

From Around the web