ரிலீஸ்க்கு முன்பே 125 கோடி சம்பாதித்த பொன்னியின் செல்வன்..!!

 
1

மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’  வரலாற்று நாவல் படமாக பொன்னியின் செல்வன் உருவாகி வருகிறது.
இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் தயாராகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ்  என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் ட்ரைலர்  சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

1

இந்த படத்தை சம்மரில் வெளியிட மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த படம் வரலாற்று படம் என்பதால் கிராபிக்ஸ் பணிகளில் தாமதம் ஏற்பட்டு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருபாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

அண்மையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் மிகப்பிரமாண்ட தொகைக்கு கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐந்து மொழிகளில், இரண்டு பாகங்களும் சேர்ந்து மொத்தமாக 125 கோடிக்கு ஓடிடி உரிமை விற்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


 

From Around the web