‘இரவின் நிழல்’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் !
முன்னணி இயக்குனரான பார்த்திபன்'ஒத்த செருப்பு' படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். தற்போது இரவில் நிழல் படத்தின் மூலம் மீண்டும் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். உலகிலே ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான்-லீனியர்(Non-Linear) திரைப்படம் இரவின் நிழல் தான். இதற்காக இந்தப் படம் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டுகளில் நுழைந்து சாதனை படைத்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன், பிரிஜிடா சாகா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இரவின் நிழல் படத்தின் மூலம் வித்தியாசமாக முயற்சி செய்திருக்கும் பார்த்திபனுக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வெளியான விடியோவில் ரஜினி கூறியதாவது:பார்த்திபன்... வித்தியாசமாக முயற்சிகள் செய்யவேண்டும் என்று எப்போதும் ஏதாவது செய்யத் துடிக்கிற கலை ரசிகர். நான் லீனியர் சிங்கிள் ஷாட். உலகத்திலேயே இதுவரை யாரும் எடுத்தது கிடையாது. 29 நிமிடங்கள் இந்தப் படத்தை எப்படி எடுத்தார்கள் எனக் காண்பித்துள்ளார்களாம். புல்லரிக்குமாம். இந்தப் படம் மிகவும் நன்றாகப் போகும் என்றார்.
Superstar @rajinikanth says that he got goosebumps & always in wonder how @rparthiepan tried to do new things with cinema ! #IravinNizhal - " The World's First Non-Linear Single Shot Film "
— Nikil Murukan (@onlynikil) July 12, 2022
In theatres from July 15th ! #IravinNizhalFromJuly15@arrahman @theVcreations pic.twitter.com/R41l860Hop