யாஷ் எடுத்த அதிரடி முடிவு, மிரண்டு போன திரை உலகம்..!!
![1](https://ciniexpress.com/static/c1e/client/77058/uploaded/e7bc74f171cdad0f23200928ed3a3f8d.webp)
பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நடிகர் யாஷ் கலந்து கொண்டு ரசிகர்களுடன் கலந்துரையாடினார் அப்போது புகைப்படமும் எடுத்துக்கொண்டார். ஆனால அந்த நிகழ்ச்சியில் 700க்கும் அதிகமான ரசிகர்கள் இருந்ததால் குரூப் போட்டோ எடுத்துகொள்ள நிகழ்ச்சிக் ஏற்பாட்டாளர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் யாஷ் ரசிகர்களுக்காக சுமார் ஒரு மணிநேரம் செலவு செய்து அவர்களுடன் தனித்தனியே புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
யாஷை பார்க்க வந்த ரசிகர்களுடன் அவர் இப்படி தனது நேரத்தை செலவு செய்து தனிதனியே புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோ வெளியாகி மற்ற ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
தனக்கு பிடித்த பிரபலத்துடன் ஒரு முறையேனும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது பலரது ஆசையாகவும், கனவாகவும் இருக்கும். அந்த வகையில் கேஜிஎப் படத்தின் மூலமாக பிலபமான கன்னட நடிகர் யாஷ், செய்துள்ள இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.