வாவ் சூப்பர் நியூஸ்..!! விரைவில் வெளியாகிறது ஜெய் பீம்-2 ..!!

நடிகர் சூர்யா நடிப்பில் ‘ஜெய்பீம்’ படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. த.செ.ஞானவேல் இயக்கிய இந்த படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தனர்.
பல்வேறு விமர்சனங்களைப் பெற்ற இப்படம் பெரும் வெற்றி பெற்றது. மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இருளர் இன மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை விளக்கும் வகையில், உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
இந்தப் படம் கோவாவில் நடைபெற்ற 53வது சர்வதேச திரைப்பட விழா, 12வது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா என உலக அளவில் பல்வேறு திரையரங்குகளிலும் விழாக்களிலும் திரையிடப்பட்டது. ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் ‘ஜெய் பீம்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2டி நிறுவனத்தின் சிஇஓ ராஜசேகர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.