கண்ணீர் விட்டு அழுத நடிகர் ரோபோ ஷங்கர்..!

 
1

கலக்கப்போவது யாரு என்ற மேடையை சரியாக பயன்படுத்தி அதன்மூலம் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதை கவர்ந்து இப்போது முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து இருக்கிறார் ரோபோ ஷங்கர். அதனை போல மாரி படம் இவருக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

பல படங்கள் நடித்த ரோபோ ஷங்கர்…குண்டாக காணப்பட்டு வந்தார் அண்மையில் நோய் பிரச்சனையால் அப்படியே முழுவதும் உடல் எடை குறைந்தார் இது பெரும் அதிர்ச்சியை தந்தது.இதனால் பல யூடியூப் பக்கங்களில் அவர் இறந்துவிட்டார் என்றெல்லாம் வீடியோ பதிவிட்டார்கள்.இதுகுறித்து ரோபோ ஷங்கரும் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

அதில் அவர் நான் 6 மாத காலம் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் தனிமையில் வாடிய நாட்களில் இருந்து வெர்ஷன் 2.0வாக மீண்டு வந்துள்ளேன் என தைரியமாக பேசினார்..

பத்து நிமிஷத்துல பாடி வந்துடும்... மறைந்தார் ரோபோ சங்கர்... ரோபோ சங்கர் மரணம், சோகத்தில் கதறிய குடும்பம் என்றெல்லாம் யூடியூப் வீடியோக்கள் போலியாக வெளியானது எனக்கு அது ரொம்பவும் பாதிப்பை தந்தது..ஏன் என்னை இப்படி சொல்கிறார்கள் என வருத்தப்பட்டேன் என சொல்லியுள்ளார் ரோபோ ஷங்கர்..

From Around the web