நடிகர் சத்யராஜ் மகள் உருக்கம்!
நடிகர் சத்யராஜ் தற்போது கூலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருட இணைந்து 38 வருடங்களுக்குப் பின் மீண்டும் நடித்து வருகிறார். நடிகர் சத்யராஜ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் மற்றும் பெரியார் கொள்கை உடையவர். சமீபத்தில் இவரது மகள் திவ்யா தனது பெற்றோர்களை குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் என்னுடைய அம்மா உடல் நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளாகவே கோமா நிலையில் இருந்து வந்தார். இதனால் எங்கள் வீட்டில் கடந்த சில ஆண்டுகள் மிகுந்த மோசமான காலகட்ட நிலையாகவே இருந்தது. எங்களது அம்மாவை கவனித்து வருவதற்காக வீட்டிலேயே அவசர சிகிச்சை பிரிவு போன்ற அமைப்பை ஏற்படுத்தி தொடர்ந்து அவரை கவனித்து வருகிறோம்.
நான் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகுந்த மன அழுத்தத்தை உணர்கிறேன். தற்போது கடந்து நான் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது எனது வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல ஒரு உறுதியை கொடுத்துள்ளது.
தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பிரிவினருக்கு சத்தான உணவுகளை வழங்க வேண்டும் என்ற கனவை தற்போது நினைவாக்கி வருகிறேன். இந்த கொள்கையே என்னை துவண்டு விழாமல் முன்னேற உதவியது.
கொஞ்சம், கொஞ்சமாக இயல்பான நிலைக்கு மாறவும் இது எனக்கு உதவியுள்ளது. இருள் சூழ்ந்த சாலையில் ஒரு சிறிய ஒளியை என்னால் பார்க்க முடிகிறது அதை நோக்கி நான் நகர்ந்து கொண்டிருக்கிறேன். விரைவில் அந்த ஒளியை சென்றடைவேன். அப்போது நிச்சயமாக உங்கள் அனைவருக்கும் அந்த செய்தியை பகிர்ந்து கொள்வேன்” எனப் பதிவிட்டுள்ளார்.