எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்..! 

 
1

சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்டவர். அவரது எளிமையான செயல்கள் மற்றும் மக்களுடன் கலந்து செயல்படும் இயல்பு பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்துள்ளது. மேலும் தனது பிறந்த நாளை வழிபாட்டுடன் தொடங்க வேண்டும் என்ற நோக்கில், அவர் தலசயன பெருமாள் கோயிலுக்கு சென்று கருடபூஜை செய்து, விசேஷ வழிபாடுகளை நடத்தினார்.

கோயிலில் வழிபாடுகளுக்குப் பின், அவர் பக்தர்களுடன் உரையதுடன் அங்கிருந்த சமூக பெண்கள் மற்றும் பக்தர்களைச் சந்தித்து, அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். கோயிலில் அவரை பார்த்த நெருக்கமான பக்தர்கள், "இவருக்கு எளிமை தன்மையே பெரிய அழகு" எனக் கூறியுள்ளனர்.

சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்கள் "எங்கள் SK எப்போதும் அடக்கமானவராக இருக்கிறார்!" என்று சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை கோயிலில் சிறப்பு வழிபாடுடன் தொடங்கி, பக்தர்களிடையே மகிழ்ச்சியும், நேர்மையும் கொண்டு வந்துள்ளார். சிவகார்த்திகேயன் ஒரு  "நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல மனிதர் " என்பதற்கான மேலும் ஒரு எடுத்துக்காட்டாக இது விளங்குகின்றது.

View this post on Instagram

A post shared by Thanthi TV (@than

From Around the web