ரூபாய் 1 கோடி வழங்கினார் நடிகர் விஜய்..! 

 
1

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு என புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதற்கான போதிய நிதி இல்லாமல் நிதி பற்றாக்குறை காரணமாக,பல ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் நிறைவு பெறாமல் கட்டிடப் பணிகள் நிலுவையில் உள்ளது.புதிதாக கட்டி வரப்படும் கட்டிடத்தின் பணிகள் முழுமை பெற 40 கோடிக்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், புதிய கட்டிடப் பணிகளுக்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், அண்மையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதி வழங்கி உள்ளார்.

அவரைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் புதிய நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகளுக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷால்,பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரிடம் வழங்கினார்.

இந்த நிலையில், அவரைத் தொடர்ந்து தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார்.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..

“தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் விஜய் நடிகர் சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web