தன் பிறந்தநாளில் நடிகை தன்ஷிகாவை திருமணம் செய்யும் நடிகர் விஷால் ..! குவியும் வாழ்த்துக்கள்..!
இயக்குனர் மற்றும் நடிகருமான அர்ஜுனிடம் உதவி இயக்குனராக தன் திரைப்பயணத்தை துவங்கினார் விஷால். அதன் பிறகு காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படம் விஷாலுக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
இருந்தாலும் விஷாலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது சண்டைக்கோழி திரைப்படம் தான். லிங்குசாமி இயக்கத்தில் விஷாலின் இரண்டாவது படமாக வெளியான சண்டைக்கோழி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இரண்டாவது படத்திலேயே ஆக்ஷன் ஹீரோ என்ற பெயரை எடுத்தார் விஷால்.
அதைத்தொடர்ந்து திமிரு ,தாமிரபரணி ,மலைக்கோட்டை என தொடர் வெற்றிகளை குவித்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். ஆனால் அதன் பிறகு விஷாலின் நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியை சந்தித்தது. அந்த சமயத்தில் தான் பாண்டியநாடு என்ற திரைப்படத்தை தானே தயாரித்து வெளியிட்டார் விஷால்.
அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று விஷாலுக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்தது. தொடர்ந்து நான் சிகப்பு மனிதன், பூஜை, துப்பறிவாளன், இரும்புத்திரை என தொடர்ந்து வெற்றிகளை பெற்றார் விஷால். ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றிப்பாதையில் பயணித்த விஷால் அவ்வப்போது பல பிரச்சனைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார். இருந்தாலும் அதிலிருந்து மீண்டு மாஸ் கம்பேக் கொடுத்து வருகின்றார்.
சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மதகஜராஜா என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தார். இந்நிலையில் தற்போது விஷால் ஈட்டி பட இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மேலும் பி.எஸ் மித்ரன் இயக்கத்திலும் ஒரு படத்தில் விஷால் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. அநேகமாக அப்படம் இரும்புத்திரை இரண்டாம் பாகமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இன்று மாலை விஷால் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் தான் சாய் தன்ஷிகா. இவர் தற்போது யோகி டா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் விழா இன்று நடைபெற உள்ளது. அந்த விழாவில் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கின்றார். அந்த விழாவில் தான் விஷால் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட இருப்பதாக சொல்லப்படுகின்றது.
அநேகமாக விஷால் தனது திருமணம் குறித்த தகவலை வெளியிடுவார் என சொல்லப்பட்டு வருகின்றது. அதாவது விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவின் திருமண அறிவிப்பை தான் இன்று யோகி டா பட விழாவில் இருவரும் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் தற்போது நடைபெறும் யோகி டா இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் உதயகுமார், விஷால் மற்றும் சாய் தன்ஷிகா காதலிப்பதாக செய்திகளை பார்த்தேன் என்றார். அதை கேட்டவுடன் விஷால் வெட்கப்பட்டு சிரித்தார். இதன் மூலம் இவர்கள் காதல் உறுதியானதாக தெரிகின்றது.மேலும் விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றது
இந்நிலையில் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா காதலிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அவர்கள் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து ரசிகர்களும் திரைபிரபலங்களும் விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவிற்கு தங்களின் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.இதனைத்தொடர்ந்து விஷால் மற்றும் தன்ஷிகா திருமணம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது