இன்ஸ்டாகிராமில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட நடிகை..!

 
1

பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருந்து வருபவர் கங்கனா ரனாவத். இவர் அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி எப்போதும் பரபரப்பான நபராகவே அறியப்படுகிறது.

இந்நிலையிலெ நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி  பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் விவசாயிகளின் போராட்டம் குறித்து ‘விவசாயிகளின் போராட்டம் காலிஸ்தான் நடவடிக்கை போன்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதற்காக டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழு, நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார் அளித்துள்ளது.

அந்த புகாரில் சமூக ஊடகங்களில் தேசத்துரோக மற்றும் இழிவான கருத்துக்களை நடிகை கங்கனா ரணாவத் பதிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். இதற்காக மும்பை நகர கூடுதல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

From Around the web