மாஸ்டர் படம் பார்த்து அஜித் சார் எனக்கு போன் செய்தார்... இப்போ அவருக்கே வில்லனாக நடிக்கிறேன்..!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் படம் குட் பேட் அக்லி.இதுவரை வெளியான அஜித் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வித்யாசமான ஒரு படமாக உருவாகி வருகின்றதாக தெரிகின்றது. குட் பேட் அக்லி படத்தின் போஸ்டர்கள் மற்றும் அஜித்தின் லுக் என அனைத்துமே வித்யாசமாக உள்ளது. குறிப்பாக அஜித் இப்படத்தில் செம ஸ்டைலிஷாக உள்ளார்.
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் தான் இப்படத்தின் இயக்குனர் என்பதால் கண்டிப்பாக அஜித்தை பார்த்து பார்த்து இப்படத்தில் செதுக்கியிருப்பார் என தெரிகின்றது. எனவே குட் பேட் அக்லி அஜித் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயினில் நடைபெற்று வருகின்றது. இதில் அஜித், த்ரிஷா ,பிரசன்னா ஆகியோர் கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை யார் கைப்பற்றியுள்ளார் என்கிற அப்டேட்டை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.
ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தான் தளபதி விஜய் நடித்த கோட் படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றி இருந்தது. 100 கோடி ரூபாய் ஷேர் அள்ளி கேக் வெட்டியும் கொண்டாடினர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தான் தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் தமிழ்நாட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளதாக சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார்.
மேலும் அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் அஜித் உடன் நடித்து இருப்பது பற்றி நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார்.
"சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்த புதிதில், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா டீமில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலமாக பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு தேட முடிந்தது."
"அஜித் சார் உடன் மிக நெருக்கமாக பணியாற்றி இருக்கிறேன். அவரது ஷூட்டிங் செட் செல்வது, ப்ரோமோஷன், மார்க்கெட்டிங் செய்வது போன்ற பல வேலைகள் செய்திருக்கிறேன். வீரம் படத்தின் டீஸர் அப்லோடு செய்ததே நான் தான்."
"மாஸ்டர் படம் பார்த்துவிட்டு அஜித் சார் எனக்கு போன் செய்து 'நாம் விரைவில் சேர்ந்து பணியாற்றலாம்' என கூறினார். அது தற்போது நிஜமாகி விட்டது. தற்போது குட் பேட் அக்லீ படத்தில் அவருடன் நடிக்கிறேன்."
அஜித் சார், இயக்குனர் ஆதிக், தயாரிப்பாளர் எல்லோருக்கும் நன்றி என அவர் கூறி இருக்கிறார்.