புஷ்பா படத்துக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்- அல்லு அர்ஜுன் அதிர்ச்சி..!

 
புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா

பான் இந்தியா படமாக வெளியிட முடிவு செய்யப்பட்டு இருந்த புஷ்பா படம், இந்தியில் வெளியாகாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. கே.ஜி.எஃப் படத்தின் எதிர்பாராத வெற்றியை அடுத்து, அதே பாணியில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியாகிறது. விரைவில் இந்த படத்தின் முதல் பாகம் வெளியிடப்படுகிறது. தெலுங்கில் நேரடியாகவும் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிட முடிவு செய்யப்பட்டு இருந்தது.

புஷ்பா படத்தின் இந்தி உரிமையை குறிப்பிட்ட தொகைக்கு பட தயாரிப்பாளர் ஒரு யூ ட்யூப் சேனலுக்கு விற்றுவிட்டார். இதனால் படத்தை இந்தியில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக புஷ்பா படம் பான் இந்தியா என்கிற வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

From Around the web