அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அல்லு அர்ஜூன்..!

 
1

மும்பையில் உள்ள பிவிஆர் சினிமாஸ் திரையரங்கில், 'புஷ்பா 2' படத்தின் முதல் நாளுக்கான டிக்கெட் விலை ரூ. 3,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் ,ராஸ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படத்திற்கான டிக்கெட் விலையை உயர்த்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது படத்தின் மகத்துவத்தையும் ரசிகர்களின் ஆர்வத்தையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு முடிவாக கருதப்படுகிறது.

இந்த அனுமதிக்காக நடிகர் அல்லு அர்ஜூன் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். புஷ்பா ராஜ் கதாபாத்திரத்தில் அவர் மீண்டும் சிறப்பாக நடிக்கவிருப்பது ரசிகர்களிடம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. புஷ்பா 2 படத்தின் முன்பதிவுகள் புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியான நாள் திரையரங்குகளில் உண்மையான திருவிழாவாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த உயர்ந்த டிக்கெட் விலைகள் திரைப்படத்தின் முதல் நாள் வருவாயை சாதனையாக உயர்த்தும் என கருதப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படம் புதிய வரலாறு படைக்கும் என்று நம்பப்படுகிறது.

From Around the web