இந்தோனேசியா சிவன் கோயிலில் சிவராத்திரி கொண்டாடிய அமலா பால்..!! 

 
1

நடிகை அமலாபால், தற்போது மலையாளம், தமிழ் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். சமீபகாலமாக ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வரும் அமலாபால், அடிக்கடி ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் பழனி முருகன் கோயிலுக்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்த அமலா பால், மகா சிவராத்திரி அன்று இந்தோனேசியாவில் உள்ள ஒரு சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள குளத்தில் புனித நீராடி இருக்கிறார். அது குறித்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

1

இந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கானோர் லைக் செய்து உள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல நடிகர், நடிகைகளும் உள்ளூர் கோயில்களிலேயே சிவராத்திரி விழாவை கொண்டாடிய நிலையில் அமலாபாலோ இந்தோனேசியா சென்று அங்குள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி விழாவை கொண்டாடியிருக்கிறார்.

From Around the web