ஆண்ட்ரியா மிகவும் கஷ்டப்பட்டுவிட்டார்: பிரபல இயக்குநர் கவலை..!

 
ஆண்ட்ரியா

தன்னுடைய படத்தில் நடிப்பதற்கு ஆண்ட்ரியா மிகவும் கஷ்டப்பட்டுவிட்டதாக பிரபல இயக்குநர் ஒருவர் நேர்காணலில் தெரிவித்துள்ளது கவனமீர்த்துள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உள்ளார் மிஷ்கின். இவருடைய இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் பிசாசு. நாகா, பிராயாகா மார்டின், ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சுமார் 6 வருடங்கள் கழித்து இயக்குநர் மிஷ்கின் உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பிசாசு 2 படம் குறித்து பேசிய இயக்குநர் மிஷ்கின். முதல் பாகத்திற்கும் இந்த படத்திற்கு சம்மந்தம் இல்லை. இரண்டு படங்களுமே வேறு  வேறு கதை. எனினும், இரண்டு படங்களும் ஒரே பாணியில் உருவானது தான். 

மேலும் பிசாசு 2 படம் பெரியவர்களுக்கான திகில் படம். படம் அச்சுறுத்தும் என்பது உறுதி. நடிகை ஆண்ட்ரியாவின் திரை வாழ்க்கையில் இந்த படம் முக்கியமானதாக அமையும். அவரை மிகவும் கஷ்டப்படுத்தி இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறேன் என்று சொல்லலாம் என மிஷ்கின் கூறியுள்ளார். 

From Around the web