நீண்ட வருடங்களுக்கு பின் தெலுங்கு படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்…!

 
1

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரண் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தனது 16-வது படத்தில் நடிகர் ராம் சரண் நடிக்கவுள்ளார். அந்த படத்தை ‘உட்பென்னா‘ படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இயக்கவுள்ளார்.

சுகுமார் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார். மேலும் நடிகை மிருனாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web