”மீரா மிதூனுக்கு ஜாமீன் வழங்குகள்” பேய் காணோம் படக்குழு கோரிக்கை..!
Sep 21, 2021, 07:55 IST
நடிகை மீரா மிதூன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் பேய காணோம் படக்குழு சிக்கலில் தவித்து வருகிறது.
செல்வ அன்பரசன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பேய காணோம்’. நகைச்சுவை கலந்த திகில் கதையாக தயாராகியுள்ள இந்த படத்தில் இயக்குனர் தருண் கோபி, கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அவர்களுடன் சேர்ந்து நடிகை மீரா மிதூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதன்முறையாக தமிழ் சினிமாவில் பேயை காணோம் என்கிற கோணத்தில் முதல் படமாக இது தயாராகியுள்ளது என்று இயக்குநர் செல்வ அன்பரசன் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் 90 விழுக்காடு படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ஆனால் எஞ்சியுள்ள காட்சிகளுக்கான ஷூட்டிங்கை நடத்த முடியாமல் படக்குழு தவித்து வருகிறார். ஏனெனில் நடிகை மீரா மிதூன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை இரண்டு முறை ஜாமீனில் எடுக்க முயன்றும் அது முடியாமல் போனது. அவரை விரைந்து ஜாமீனில் எடுத்து மீதமுள்ள 10 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட ‘பேய காணோம்’ படக்குழு முயன்று வருகிறது.
செல்வ அன்பரசன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பேய காணோம்’. நகைச்சுவை கலந்த திகில் கதையாக தயாராகியுள்ள இந்த படத்தில் இயக்குனர் தருண் கோபி, கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அவர்களுடன் சேர்ந்து நடிகை மீரா மிதூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதன்முறையாக தமிழ் சினிமாவில் பேயை காணோம் என்கிற கோணத்தில் முதல் படமாக இது தயாராகியுள்ளது என்று இயக்குநர் செல்வ அன்பரசன் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் 90 விழுக்காடு படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ஆனால் எஞ்சியுள்ள காட்சிகளுக்கான ஷூட்டிங்கை நடத்த முடியாமல் படக்குழு தவித்து வருகிறார். ஏனெனில் நடிகை மீரா மிதூன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை இரண்டு முறை ஜாமீனில் எடுக்க முயன்றும் அது முடியாமல் போனது. அவரை விரைந்து ஜாமீனில் எடுத்து மீதமுள்ள 10 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட ‘பேய காணோம்’ படக்குழு முயன்று வருகிறது.