எச்சரிக்கையாக இருங்க..! ஆர்த்தி போட்ட இன்ஸ்டா ஸ்டோரி வைரல்..!

ரவி மோகன் 15வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்தார் ஆர்த்தி ரவி.
இதையடுத்து மகன்கள் ஆரவ், அயான் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு என் குறும்பாக்கள் என தெரிவித்தார் ரவி மோகன். அதே புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியிலும் போஸ்ட் செய்தார். அவர் வெளியிட்ட அந்த புகைப்படம் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. ரவி மோகனை போன்றே மகன்களும் உயரமாக வளர்கிறார்கள். அப்பா மாதிரியே இருக்கிறார்கள் என ரசிகர்கள் பேசத் துவங்கிவிட்டார்கள்.
இந்நிலையில் எச்சரிக்கையாக இருக்கவும், மனிபுலேஷன் கூட அன்பு போன்று தெரியும் என இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டிருக்கிறார் ஆர்த்தி.
மகன்களை தனக்கு ஏற்றது போன்று பயன்படுத்திக் கொள்கிறார் ரவி மோகன் என்கிறாரா ஆர்த்தி?. இல்லை தெரபிஸ்ட் கெனிஷா பிரான்சிஸ் ரவி மோகனை மனிபுலேட் செய்கிறார் என கூறுகிறாரா?. அவர் யாரை சொல்கிறார் என்றே தெரியவில்லை என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.தன் மகன் தன்னை விட உயரமாக வளர்ந்துவிட்டதாகக் கூறி ஆர்த்தி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் ரவி மோகன் இன்னும் போஸ்ட் போடவில்லை என்றார்கள். இதையடுத்து ரவி மோகன் வெளியிட்ட புகைப்படம் வைரலாகிவிட்டது.
பவுன்சர்கள் வந்தார்களா?
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கேட்ட முதல் கேள்வியே, ஒரு வழியாக மகன்களை சந்தித்துவிட்டார் போன்று ரவி மோகன். பவுன்சர்களுடன் வந்தார்களா இல்லை தானாக வந்தார்களா அண்ணா என்றார்கள்.
ஆரவும், அயானும் தன்னை சந்தித்துவிடக் கூடாது என்று அவர்களை பவுன்சர்களுடன் வெளியே அனுப்புகிறார்கள். அதனால் என் மகன்கள் கார் விபத்தில் சிக்கியபோது கூட அவர்களை சந்கிக்க விடவில்லை என்று முன்பு தெரிவித்தார் ரவி மோகன். அதை மனதில் வைத்து தான் தற்போது இந்த சந்திப்பு பவுன்சர்களுடன் நடந்ததா இல்லையா என கேட்கிறார்கள் ரசிகர்கள்.
ரவி மோகன் தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். உங்களின் புகைப்படங்களை வெளியிட மாட்டீர்களா என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் தற்போது வித விதமாக உடை அணிந்து புகைப்படம், வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார் அவர்.
மகன் படத்தை இயக்க ஆசைரவி மோகன் ஸ்டுடியோஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியிருக்கும் ரவி மோகன் தன் குறும்பா ஆரவை ஹீரோவாக்க ஆசைப்படுகிறார். அவரின் அந்த ஆசை நிச்சயம் நிறைவேறும் என நம்பப்படுகிறது.மகனுக்கு முன்பு யோகி பாபுவை வைத்து படம் இயக்க முயற்சி செய்து வருகிறார் ரவி மோகன். இந்நிலையில் பிறந்ததில் இருந்து சொந்த வீட்டில் வசித்து வந்த தான் தற்போது முதல் முறையாக வாடகை வீட்டில் இருப்பதாக அவர் பேசியதை கேட்ட ரசிகர்கள் வேதனை அடைந்தார்கள்.
சொந்த வீடு இல்லை
கோடி கோடியாக சம்பாதிக்கும் ஒருவர் இப்படி சொந்த வீடு இல்லாமல் இருக்கிறாரே. அந்த பங்களா என்னாச்சுணா, ஆர்த்திக்கு கொடுத்துவிட்டீர்களா என ரசிகர்கள் கேட்டார்கள். மனைவி ஆர்த்தியை பிரிந்த போது எதுவும் எடுக்காமல் வெறும் கையுடன் வீட்டை விட்டு வெளியே வந்ததாக முன்பு தெரிவித்தார் ரவி மோகன். ஆனால் அவர் தனக்கு தேவையான எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தான் சென்றார் என்றார் ஆர்த்தி.
ரவி மோகன், ஆர்த்தி விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் வந்த மகன் பிறந்தநாளால் அவர்களை பற்றியே சமூக வலைதளங்களில் மீண்டும் பேசத் துவங்கிவிட்டார்கள். இந்த விவாகரத்து ரத்தாகுமா, ஆகாதா என விவாதிக்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.