பாக்யா மற்றும் அமிர்தா இணைந்து திருமணத்திற்கு செய்யும் சமையல் காண்ட்ராக்ட்..!!

தற்போது எழில் – அமிர்தா திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. மறுபுறம் வீட்டை காலி செய்ய சொல்லும் கோபியை எப்படி சமாளிக்க போகிறோம் என இருக்கிறார் பாக்யா.இப்படி பரபரப்பாக போய்க்கொண்டுள்ளது இந்த சீரியல்…
அந்த நேரத்தில் தாத்தா அவரது மொத்த சொத்தையும் எழுதி கொடுத்து விடுவதாக கூறி, அதற்கு பதிலாக வீட்டை மட்டும் கொடுத்துவிடும்படி கேட்கிறார்.கோபியும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்…இப்படி ஒரு பக்கம் உள்ளது இதனை தாண்டி எண்ணலாம் ஆக போகிறது என்பதை வரும் நாட்களில் காண்போம்.
அடுத்து வரும் நாட்களில் பாக்யா மற்றும் அமிர்தா இணைந்து ஒரு திருமணத்திற்கு சமையல் காண்ட்ராக்ட் எடுத்து செய்வது போல காட்சிகள் வருகிறது. அதன் ஷூட்டிங்கில் ஒரு வீடியோவை எடுத்து வெளியிட்டு இருக்கிறார் நடிகை ரித்திகா.
என்னை அவர் மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, சமையல் வேலைக்கு ஆள் எடுத்துவிட்டார் என காமெடியாக பாக்யா மீது புகார் கூறி இருக்கிறார்.அந்த வீடியோ இப்போது பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே செம வைரல் ஆகியுள்ளது…