அடிமேல் அடி வாங்கும் பாக்யா! சுதாகரின் அடுத்த சதித்திட்டம் ரெடி..!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் ரெஸ்டாரண்ட் முடிந்து அனைவரும் கிளம்பும் போது பாக்யாவை வந்து பார்க்கின்றனர். எங்களை வேலையை விட்டு தூக்கிட மாட்டீங்களா அக்கா என கேட்கின்றனர். அதற்கு பாக்யா, உங்களை வேலையை விட்டு தூக்கனும்னா, புது ரெஸ்டாரண்ட் கையை விட்டு போனப்பவே அனுப்பு இருப்பேன். தைரியமா இருங்க என சொல்லி அனுப்பி வைக்கிறாள்.
அதனை தொடர்ந்து பாக்யா, செல்வி ரெஸ்டாரண்ட் விட்டு கிளம்ப ரெடியாகும் போது, இனியா வீடியோ கால் பண்ணுகிறாள். அப்போது செல்வியிடம் மன்னிப்பு கேட்கிறாள். உடனே செல்வி, அதெல்லாம் எதுக்கு பாப்பா. நான் தூக்கி வளர்த்த பொண்ணு நீ. சந்தோஷமா இரு என சொல்கிறாள். இதனையடுத்து பாக்யா வீட்டுக்கு கிளம்பி வர கோபி, ஈஸ்வரி இருவரும் பேசுகின்றனர். சுதாகர் சார் நம்ம சம்பந்தி. அவர்க்கிட்ட எதுவும் பேசிக்க வேண்டாம்.
நம்ம வீட்டு பொண்ணு இனியா அங்க வாழுறா என்கின்றனர். அதற்கு பாக்யா, என் பொண்ணு வாழ்க்கைக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன். இதை நான் உங்க சுதாகர் சம்பந்தி கிட்டயும் சொல்லிட்டேன் என கடுமையாக எச்சரித்துவிட்டு எழுந்து போகிறாள். இதனால் அதிர்ச்சியடையும் ஈஸ்வரி, இவளோட ஆணவம் மட்டும் அடங்கவே மாட்டேங்குது என்கிறாள். அதனை தொடர்ந்து எழில் வந்து அவளை பார்க்கிறாள்.
அடுத்த படத்துக்கு புரொடியூசர் அக்ரிமெண்ட் போட்டாரும்மா. மூன்று மாசம் வெளிநாட்டுல ஷுட்டிங் என் சொல்கிறான். இவ்வளவு சந்தோஷமான விஷயத்தை நீ ஏன்டா சோகமா சொல்ற என கேட்க, நீயே நிறைய பிரச்சனைல இருக்க. இந்த சமயத்துல உன்னை தனியா விட்டு போறது நினைச்சா கஷ்டமா இருக்கு. நான் வேணா இங்கையே ஷுட்டிங் நடத்துறது பத்தி புரொடியூசர் கிட்ட பேசவா என கேட்கிறான். உடனே பாக்யா அதெல்லாம் வேணாம்டா. நீ உன்னோட வேலையை பாரு என்கிறாள்.
மறுநாள் பாக்யா ரெஸ்டாரண்ட்டில் இருக்கும் போது, லீசுக்கு விட்ட ஓனர் வருகிறார். இந்த ரெஸ்டாரண்ட்டை விக்க போறேன். எனக்கு நிறைய கடன் இருக்கு. நீங்க ஒரு வாரத்துல காலி பண்ணனும் என சொல்கிறான். இதனைக்கேட்டு பாக்யா கடும் அதிர்ச்சியடைந்து, எவ்வளவோ பேசி பார்க்கிறாள். ஆனால் ரெஸ்டாரண்ட் ஓனர் உறுதியாக சொல்லிவிடுகிறாள்.
இதனையடுத்து பாக்யா வீட்டுக்கு வந்து சோகமாக உட்கார்ந்து இருக்கிறாள். உடனே ஈஸ்வரி இவளுக்கு நேரம் சரியில்லை. நம்ம வேணா பரிகாரம் பண்ணலாமா என கேட்கிறாள். அப்போது அங்கு வரும் எழில், என்னோட பிரெண்ட் கிட்டயும் பேசிட்டேன். ரெஸ்டாரண்ட் விக்கிறதுல அவர் உறுதியா இருக்காரு என்கிறான். இதனைக்கேட்டு வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியடைகிறான். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.