பிரவுன் மணியிடம் முத்து கேட்ட கேள்வி... ஆடிப்போன ரோகிணி..!  

 
11

இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் நாடகத்தில் அருணின் வீட்டுக்கு வரும் சீதா, நம்ம கல்யாணம் இனிமே நடக்குறதுக்கு வாய்ப்பே இல்லை. என் மாமாவோட விருப்பம் இல்லாமல் இந்த கல்யாணம் நடக்காது. நம்ம பிரிஞ்சுடலாம் என சொல்கிறாள். இதனைக்கேட்டு ஷாக்காகும் அருண், அப்போ நம்மோட காதல் என கேட்கிறான். என் குடும்பத்தை கஷ்டப்படுத்திட்டு என்னால மட்டும் சந்தோஷமா இருக்க முடியாது என சொல்லி விடுகிறாள்.

அதனை தொடர்ந்து அவள் கிளம்பி வர்ற, அப்போது அருணின் அம்மா எதிரில் வருகிறார். அவர் வாம்மா சீதா என சொல்ல, எதுவும் பேசாமல் அழுது கொண்டே போகிறாள். அதன்பின்னர் அருணிடம் வந்து என்னடா ஆச்சு என்று விசாரிக்கிறாள். இனிமே இந்த கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்லிட்டாம்மா. இந்த விஷயத்தை பற்றி நம்மளும் இனிமேல் பேச வேண்டாம் என கூறி விடுகிறான் அருண்.


இந்தப்பக்கம் சீதாவுக்காக ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கும் முத்து, அவனுடைய கம்பெனியில் வந்து விசாரிக்கிறான். அங்குள்ள வாட்ச்மேன். தூய்மை பனி செய்பவர்கள். உடன் வேலை செய்பவர்களிடம் விசாரிக்கிறான் முத்து. அப்போது அவன் சிகரெட் பிடிப்பது, குடிப்பது தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் அவன், இந்த மாப்பிள்ளையை போய் மீனாக்கிட்ட சொன்னா கோபப்படுவா. உங்களை மாதிரி என் தங்கச்சிக்கும் குடிகார மாப்பிள்ளை பார்க்குறியான்னு கேப்பா என யோசிக்கிறான்.

இதனால் வேற மாப்பிளை பார்க்கலாம் என முடிவு பண்ணுகிறான் முத்து. அதனை தொடர்ந்து அவன் வீட்டுக்கு வர, அந்த சமயத்தில் மலேசியா மாமா பிரவுன் மணி அங்கு வருகிறார். அவரை பார்த்ததுமே மொத்த குடும்பத்தையும் வர சொல்லி சத்தம் போடுகிறான். மலேசியா மாமா வந்து இருக்காங்க என கத்த, ரோகிணி ஷாக்காகி வெளியில் வருகிறாள். பிரவுன் மணியை பார்த்ததும் கன்னாபின்னாவென்று காத்த ஆரம்பிக்கிறாள் விஜயா.


 

அண்ணாமலை அவளை சமாதானப்படுத்தி வீட்டுக்கு வந்தவங்களை இப்படியெல்லாம் பேசக்கூடாது. அவர் எனன் சொல்றாருன்னு கேப்போம் என அழைக்கிறார். அவர் உள்ளே வந்தும் விஜயா விடாமல், இந்த மானங்கெட்டவ தான் நடிக்க சொல்லிருந்தாலும், உங்க வயசுக்கு அறிவில்லை. என்னமோ மலேசியாவே உங்களுக்கு சொந்தம் மாதிரில பேசிட்டு இருந்தீங்க என கோபமாக கத்துகிறாள். ரோகிணி மனசுக்குள்ளே முடிஞ்ச பிரச்சனையை இந்த மனுஷன் எதுக்கு திருப்பி கிளப்புறாரு என யோசிக்கிறாள். விஜயா விடாமல், இவரை சொல்லி என்ன.

இதுக்கெல்லாம் மாஸ்டர் மைண்டா இவதான் இருந்தாள் என கேப்பே விடாமல் ரோகிணியை அடிக்கிறாள். அண்ணாமலை அவளை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு பிரவுன் மணியிடம் என்னவென்று விசாரிக்கிறார். இதனையடுத்து அவர், பரசுக்கு இங்க நடந்த விஷயம் தெரிஞ்சு ரொம்ப கோபப்பட்டாரு. இது குடும்ப பிரச்சனை ஆகிருச்சு. நீங்கதான் கொஞ்சம் அவர்க்கிட்ட பேசனும் என்கிறான். அண்ணாமலையும் பேசுவதாக கூறுகிறாள்.

அதன்பின்னர் பிரவுன் மணி அங்கிருந்து கிளம்ப, முத்து அவரை நிப்பாட்டுகிறான். உங்களுக்கு என்மேல ஏதாவது கோபம் இருக்கா? உங்களை நான்தான் மாட்டிவிட்டேன். அந்த கோபத்துல என் கார் பிரேக் வாயிரை எதுவும் கட் பண்ணீங்களா என விசாரிக்கிறான். ரோகிணி இதனைக்கேட்டு ஆடிப்போகிறாள். பிரவுன் மணி அவனிடம், நான் பண்ண ஒரே தப்பு இங்க வந்து நடிச்சது தான் தம்பி. மத்தபடி நான் ரொம்ப மோசமானவன் எல்லாம் கிடையாது என சொல்லிவிட்டு போகிறான்.

இதனிடையில் சீதா வீட்டுக்கு வந்த பிறகு அம்மாவிடம் இனிமேல் என்னால யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது. அருண்கிட்ட இனிமே நம்ம பேச வேண்டாம் சொல்லிட்டேன் என கூறிவிட்டு அழுதுக்கொண்டே ரூமுக்கு போகிறாள். இதனை சத்யா பார்த்துவிட்டு, இந்த பிரச்சனையை பத்தி முத்து, மீனாவிடம் பேசனும் என முடிவு செய்கிறான்.

From Around the web