நயன்தாராவை விடாமல் துரத்தும் சிரஞ்சீவி..!

 
நயன்தாராவை விடாமல் துரத்தும் சிரஞ்சீவி..!

மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘லூசிஃபர்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்க மீண்டும் இயக்குநர் மோகன் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியார், விவேக் ஓப்ராய், டோவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படம் ‘லூசிஃபர்’.

இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். தற்போது ஆச்சார்யா படத்தின் டப்பிங் வேலைகளில் உள்ள சிரஞ்சீவி விரைவில் இந்த படத்தின் பணிகளில் கலந்துகொள்ள எண்ணினார்.

ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ‘லூசிஃபர்’ படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளது. முன்னதாக இந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அந்த படத்தில் அவர் அப்போது நடிக்கவில்லை.

பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ப்ரியாமணி ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கிற்கான படப்பிடிப்பு கொரோனா பிரச்னையால் தள்ளிப்போயுள்ள சூழலில். படக்குழுவினர் மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளனர்.

இயக்குநர் ராஜாவும் தன் பங்குக்கு நயன்தாராவிடம் பேசி வருகிறாராம். ஏற்கனவே அவருடன் தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற படங்களில் நயன்தாரா பணியாற்றியுள்ளார். இதனால் இம்முறை நிச்சயம் நயன்தாரா லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். 
 

From Around the web