புதிய படத்தில் இளையராஜவுடன் இணையும் பா. ரஞ்சித்..!

 
இளையராஜா மற்றும் பா. ரஞ்சித்
சந்தோஷ் நாராயணன் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் காரணமாக இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்துக்கு இளையராஜா இசையமைப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஓடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டார பரம்பரை’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவியுள்ளது.

சமீபத்தில் வெளியான ஒரு நேர்காணலில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற பெயரில் அடுத்த படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். இது காதலை மையப்படுத்திய படமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் இப்படத்திலும் கதாநாயகியாக நடிப்பார் என தெரிகிறது.

இந்நிலையில், பா.இரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்  ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலை படக்குழு தரப்பில் இன்னும் உறுதி செய்யவில்லை. எனினும், விரைவில் இந்த கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் செய்தி தெரிவிக்கின்றன.

From Around the web