கொரோனா 2வது அலை அச்சுறுத்தல்: மீண்டும் ஓ.டி.டி பக்கம் திரும்பும் நயன்தாரா..!

 
கொரோனா 2வது அலை அச்சுறுத்தல்: மீண்டும் ஓ.டி.டி பக்கம் திரும்பும் நயன்தாரா..!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நயன்தாரா நடித்து ரிலீஸுக்கு காத்திருந்த புதிய படம் ஓ.டி.டி-யில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் இதனுடைய தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு திரையரங்குகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்காரணமாக பல்வேறு புதிய படங்களின் ரிலீஸ் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் மீண்டும் தயாரிப்பு நிறுவனங்கள் பல ஓ.டி.டி நிறுவனங்களை நாடி வருகின்றன. அந்த வகையில் த்ரிஷா, நயன்தாரா போன்ற முன்னணி நாயகிகள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த பல படங்கள் ஓ.டி.டி-யில் ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில் இயக்குநர் விக்வேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை மிலிந்த் ராவ் என்பவர் இயக்கியுள்ளார்.

விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘நெற்றிக்கண்’ படத்திற்கு கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் என்பவர் இசையமைத்துள்ளார். முன்னதாக நயன்தாரா அம்மனாக நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் ஹாட் ஸ்டாரில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

From Around the web