80's கனவுக்கன்னியாக வலம் வந்த பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி..!!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினசரி பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினருக்கும் உள்ளிட்டோருக்கும் தொற்று ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகையும் பாஜக செய்தி தொடர்பாளருமான குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனாவின் இரண்டு அலைகளில் இருந்து தப்பித்தேன், மூன்றாவது அலை என்னை பிடித்துவிட்டது. கொரோனா தொற்று உறுதியானதைது, அதனால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டேன்” என பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் நிகழ்ந்த குளறுபடியை கண்டித்து அண்மையில் பாஜக ஆதரவாளர்களுடன் குஷ்பு பட்டிணம்பாக்கத்தில் பேரணி நடத்தியிருந்தது குறிப்பிடதக்கது.
Ok. finally #Covid catches up with me after dodging last 2 waves. I have just tested positive. Till last eve i was negative. Have a running nose,did a test n Voila! I have isolated myself. Hate being alone. So keep me entertained for the next 5 days. N get tested if any signs 🥰
— KhushbuSundar (@khushsundar) January 10, 2022