அருண் விஜய் படத்தில் வில்லனுக்கு மரியாதை செய்த இயக்குநர் ஹரி..!

 
கருடா ராம்
ஹரி இயக்கும் புதிய படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் நிலையில், படக்குழுவினர் அனைவரும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முதன்முறையாக தன்னுடைய மச்சினர் அருண் விஜய்யை வைத்து ஹரி படம் இயக்கி வருகிறார். முற்றிலும் கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இதில் ப்ரியா பவானிசங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.

இதற்கான ஷூட்டிங் பழனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் நடந்து வருகிறது. படத்தில் வில்லனாக கே.ஜி.எஃப் மூலம் புகழடைந்த கருடா ராம் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் சென்னையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் வில்லன் கருடா ராமின் காட்சிகள் சமீபத்தில் எடுத்து முடிக்கப்பட்டது. அவரை கொண்டாட்டத்துடன் வழியனுப்பி வைத்த படக்குழு, அவருக்கு மாலை அணித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

வில்லன் நடிகருக்கு படக்குழுவினர் செய்த மரியாதைக்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விரைவில் படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

 

From Around the web