இது தேவையா தங்கமயில்..? உண்மையை சொல்லிடுங்க.!

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நாடகத்தில் மீனா பற்றி எல்லாரும் பெருமையாக பேசுவதால் வீட்டில் உள்ளவர்கள் ஹேப்பியாக இருக்கின்றனர். இதனையடுத்து பாண்டியன் கடையில் இருந்து வரும் போது வீட்டில் உள்ள எல்லாரையும் கூப்பிடுகின்றனர். அப்போது அரசி ஹாலில் உட்கார்ந்து படித்து கொண்டிருக்க, அப்பா தன்னுடன் பேசுவாரா என ஏக்கமாக பார்த்து கொண்டிருக்கிறான்.
பாண்டியன் அவளை பார்த்து கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, என்னப்பா படிச்சுட்டு இருக்கியா? கல்யாணத்துக்கு அப்பறம் உன்னை படிக்க வைக்கிறேன் மாப்பிள்ளை சொல்லிட்டாராமே. நல்ல படிப்பா என சொல்கிறான். இதனைக்கேட்டு அரசி ஹேப்பி ஆகிறாள். இதனையடுத்து ஹாலுக்கு அனைவரும் வந்ததும், செந்தில் கேக்கை எடுத்து வெளியில் வைக்கிறான். பாண்டியன் மீனாவை அழைத்து வெட்ட சொல்கிறான்.
கோமதி என்னங்க இதெல்லாம் என கேட்க, இன்னைக்கு கடைக்கு வந்த எல்லாரும் மீனாவை பத்தி தான் ஒரே பெருமையா பேசுனாங்க. எனக்கு சந்தோசம் தாங்கலை என்கிறான். அப்போது பழனி அதுனால மீனாவுக்கு ஏதாவது பண்ணியே ஆகனும் மாமா நினைச்சாரு. அதான் கேக் வெட்டலாம் நான் ஐடியா கொடுத்தேன் என்கிறான் பழனி. இதனைக்கேட்டு சுகன்யா கடுப்பாகி அவனை பார்த்து லுக் விடுகிறாள்.
இதனையடுத்து மீனாவை கேக் வெட்ட சொல்கிறான் பாண்டியன். அவள் ராஜியையும் அழைத்து, இவளும் போட்டில ஜெயிச்சு பைக் வாங்கி இருக்கா. ராஜியும் சாதனை பண்ணி இருக்காளா என்கிறாள்.உடனே பாண்டியன் அதை மறந்துட்டேன். இன்னொரு கேக் வாங்கலாம் என சொல்கிறான். மீனா அதெல்லாம் வேண்டாம் மாமா என சொல்லி, ராஜியுடன் சேர்ந்து கேக் வீட்டுக்குகிறாள். அனைவரும் ராஜி, மீனாவை பாராட்ட தங்கமயில் அதை ஏக்கமாக பார்க்கிறாள்.
சரவணனும் வீட்டுக்கு வந்த ரெண்டு மருமகள் பாராட்டு வாங்கும் போது, நம்ம பொண்டாட்டி இந்த மாதிரி எதுவும் செய்யவில்லையே என பீல் பண்ணுகிறான். இதனையடுத்து ரூமுக்கு வந்ததும் தங்கமயில் பேசும் போது, கோபத்தில் விளாசுகிறான் சரவணன். நம்ம கல்யாணத்தப்ப உன்கிட்ட என் முன்னாள் காதல் வரைக்கும் ஓபனா சொன்னேன். ஆனால் நீ என்கிட்ட பொய் சொல்லி இருக்க. நீ இரண்டு மாசமா என்ன பண்ணிட்டு இருந்தான்னு அப்பாகிட்ட சொல்லவா.
அவர் பெருமைப்படுறாருன்னு பார்க்கலாம் என்கிறான். இதனையடுத்து அவளிடம் நீ எந்த காலேஜ்ல படிச்ச, எனக்கு இப்போ தெரிஞ்சாகனும் என கேட்கிறான். அதனை தொடர்ந்து அவளும் ஒரு காலேஜ் பெயரை சொல்ல, ராஜி மீனாவால இந்த குடும்பத்துக்கு பெருமைன்னு அப்பா சொன்னப்ப, உன்னால எனக்கு இப்படி ஒரு பெருமை எனக்கு கிடைக்காதான்னு நினைச்சேன்.
ஆனால் கடைசி வரை நீ எனக்கு இந்த மாதிரி சந்தோசம் தர மாட்டீல என சொல்லிவிட்டு மாடியில் படுக்க போகிறான். இதனால் தங்கமயில் மிகுந்த வேதனை அடைகிறாள். இப்படியாக இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட்டில் நடந்தவை குறித்து தற்போது பார்க்கலாம்.