நீங்க எனக்கு உதவி செய்யலன்னாலும் தொந்தரவா இருக்காதீங்க : பாக்யா..!

 
1

பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் ஹோட்டலை வந்து பாக்யா திறந்து வேலைகளை கவனித்து கொண்டிருக்க, அப்போது ஓனர் வருகிறார். அவரிடம் பாருங்க சார் அந்த கவுன்சிலர் ஆட்கள் பண்ண காரியத்தை. எல்லாத்தையும் அடிச்சு, உடைச்சு இருக்காங்க என்கிறாள். அவன் அதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் ஹோட்டலை காலி பண்ணுங்கம்மா என சொல்கிறாள். இதனைக்கேட்டு அதிர்ச்சியடையும் பாக்யா, எனன் சார் சொல்றீங்க? இதை வைச்சு தான் எல்லாமே இருக்கு என்கிறாள்.

 

அதற்கு கடை ஓனர் இதுக்குமேல எந்த பிரச்சனை வேண்டாம்மா. இதெல்லாம் சரிப்பட்டு வராது. நீங்க ஹோட்டலை காலி பண்ணுங்க என சொல்லி, ஷெட்டரை அடைத்து விடுகிறான். இதனால் பாக்யா மிகுந்த சோகமாக வீட்டுக்கு வருகிறாள். அப்போது ஈஸ்வரி ரூமில் தூங்கி கொண்டிருக்கும் போது உள்ளே வந்து பார்க்கிறாள். அவளை எழுப்பவும், ஈஸ்வரி எழுந்து உட்கார்ந்து உன் மாமா என் கனவுல வந்தாரு என சொல்லி அழுகிறாள்.


வீட்ல நடக்குற பிரச்சனை எல்லாத்தையும் சொனேன். இதுக்கு எல்லாம் காரணம் ஹோட்டல் தான. அதை அடைச்சுடுங்கன்னு சொன்னாரு என்கிறாள். பாக்யா உஷாராகி, மாமா அப்படியெல்லாம் சொல்லி இருக்க மாட்டாரு. எனக்கு பல நேரத்துல அவர்தான் சப்போர்ட்டா இருந்து இருக்காரு. மாமாவுக்கு அப்பறம் நீங்கதான் எனக்கு உறுதுணையா இருந்தீங்க. இப்போ நீங்களே எனக்கு எதிரா இருக்கிறது கஷ்டமா இருக்கு அத்தை. நீங்க எனக்கு சப்போர்ட்டா இல்லன்னா கூட பரவாயில்லை. எனக்கு எதிரா இருக்காதீங்க என்கிறாள்.

அதன்பின்னர் மறுநாள் பாக்யா வீட்டில் இருக்கும் போது, அவளுக்கு உதவிய கட்சிக்காரர் வருகிறார். அவளிடம் உங்களோட சாப்பாட்டை அமைச்சர் ரொம்பவே பாராட்டினாரு. இனிமே கட்சி சம்பந்தமா நடக்கிற எல்லாத்துலயும் நீங்கதான் சமைக்கனும் சொல்லி இருக்காரு. நீங்க தட்டாம செய்யனும். அதோட நீங்க சமைச்சதுக்கு அமைச்சர் பணம் கொடுத்தாரு என சொல்லி கொடுக்கிறார். பாக்யா வேண்டாமென சொல்ல, அமைச்சரே கொடுக்க சொன்னாரு. வாங்கிகோங்கம்மா என சொல்லி வழங்குகிறார்.

 

இதனிடையில் இனியா வீட்டில் இருக்கும் போது சுதாகர், செழியன் பிரச்சனை என்னாச்சு? நானும் மறந்துட்டேன். உன் அண்ணனை வெளிய கொண்டு வந்துடலாம் என சொல்கிறான். அதற்கு இனியா அம்மா அண்ணனை வெளியில கொண்டு வந்துட்டாங்க. மினிஸ்டர் கிட்ட பேசி வெளியில வர வைச்சுட்டாங்க என்கிறாள். இதனைக்கேட்டு அதிர்ச்சியடையும் சுதாகர் வெளியில் காட்டிக்கொள்ளாமல், ஹோட்டல் விஷயத்துல உன் அம்மா என்ன முடிவு பண்ணி இருக்காங்க.

இனிமே அந்த ஹோட்டலை திறக்க வேண்டாம். என்னால பதில் சொல்ல முடியலை என்கிறான். அதற்கு இனியா அம்மா ஹோட்டலை நான் எப்படி திறக்க வேணாம் சொல்ல முடியும். அது மட்டும் இல்லாம்மா, அம்மா பெரிய ஹோட்டல் தான் வைச்சு இருந்தாங்க. உங்களால தான் இப்போ சின்ன ஹோட்டல் திறந்தாங்க என்கிறாள். உடனே நிதிஷ் கோபப்பட்டு இனியாவை தனியாக அழைத்து வந்து, என் அப்பாவை எதிர்த்து பேசுற வேலை வைச்சுக்காத.

என் அப்பா சொல்றதை தான் எங்க வீட்ல எல்லாரும் கேப்பாங்க. நீயும் அதைத்தான் கேட்கனும். எல்லாரும் அதைத்தான் கேட்கனும் என்கிறான். இதனைக்கேட்டு இனியா ஷாக்காக, சுதாகர் வில்லத்தனமாக சிரிக்கிறான். இதனிடையில் பாக்யா ஹோட்டல் ஓனரிடம் பேசி பார்க்கலாம் என வருகிறாள். அங்கு அவருடைய பொண்ணுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட, பாக்யா உதவி செய்கிறாள். இதனையடுத்து மனம் மாறிய ஓனர் நீங்கள் ஹோட்டலை தொடர்ந்து நடத்துங்க என சொல்லி விடுகிறார். இதனால் பாக்கியலட்சுமி மகிழ்ச்சி அடைகிறாள்.

From Around the web