சுதாகர் ஆட்களை அடிக்க பாய்ந்த எழில்..!

பாக்கியலட்சுமி சீரியலில் ரெஸ்டாரண்டில் இருக்கும் தன்னுடைய சில பொருட்களை எடுப்பதற்காக பாக்யாவும், செல்வியும் வருகின்றனர். அப்போது சுதாகர் மேனேஜர் உங்களை உள்ள விடக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க என்கிறான். எழிலும் அங்கு வர, யாரை உள்ள விட மாட்டேன் சொல்றீங்க என கோபப்படுகிறான். பாக்யா அவனை அமைதியாக இருக்குமாறு சொல்கிறாள். அதன்பின்னர் அங்கு இருந்து பொருட்களை அப்புறப்படுத்துபவர்கள், இராமமூரத்தியின் போட்டோவை தூக்கி வெளியில் எறிகின்றனர்.
அதனை பார்த்து பாக்யா கடும் அதிர்ச்சி அடைகிறாள். எழிலும் யாரோட போட்டோவை தூக்கி போடுறீங்க நீங்க என கோபப்பட்டு அடிக்க போகிறான். பாக்யா அவனை தடுத்து, பேச வேண்டிய ஆட்கள் கிட்ட தான் பேசுனோம். இவங்ககிட்ட பேசி என்னாக போகுது என்கிறாள். அதனை தொடர்ந்து நேராக சுதாகரை பார்க்க போகிறாள். அவன் நல்லவன் மாதிரி வாங்க சம்பந்தி என வரவேற்கிறான்.
பாக்யா கடும் கோபத்துடன் நீங்க பண்றது எதுவுமே சரி இல்லை. என் மாமனார் போட்டோவை தூக்கி வெளியே போட சொல்லி இருக்கீங்க என்கிறாள். உடனே அவன் நேத்தே உங்களுக்கு தேவையானதை எடுத்து போயிருந்தால், இந்த பிரச்சனை வந்து இருக்காதுல என சொல்கிறான். அதற்கு பாக்யா நீங்க வேணும்னு தான் இதை பண்ணி இருக்கீங்க. ஒரு ரெஸ்டாரண்ட்டுக்காக உங்க பையனோட வாழ்க்கையை அடமானம் வைச்சு இருக்கீங்க. என்கிட்ட ஒரு மாதிரி பேசுறீங்க. எங்க வீட்ல ஒரு மாதிரி பேசுறீங்க. இனியா அப்பா கிட்ட ஒரு மாதிரி பேசுறீங்க.
உங்களை எல்லாம் நம்பவே முடியாது. என்னோட மாமனார் போட்டோவை தூக்கி போட்ட மாதிரி இனியாவையும் ஒரு நாள் தூக்கி போடணும்னு நினைச்சீங்கன்னா அவ்வளவு தான். அடுத்தவங்களை அழிச்சு முன்னேறனும் நினைக்கிற உங்களுடைய வெறி, ஒருநாள் உங்களை அழிச்சிடும் என கடுமையாக எச்சரித்து விட்டு கிளம்புகிறாள்.
இதனிடையில் வீட்டில் சம்பந்தி சொல்றது ஒரு மாதிரி இருக்கு. பாக்யா பேசுறது ஒரு மாதிரி இருக்கு என செழியன், ஈஸ்வரி, கோபி உட்கார்ந்து பேசி கொண்டு இருக்கின்றனர். அப்போது பாக்யாவை பேசி கொஞ்சம் அடக்கி வைக்கனும் என்கிறாள் பாக்யா. அப்போது எழில் வந்து இராமமூர்த்தி போட்டோவை கீழே தூக்கி போட்ட விஷயத்தை கண்ணீருடன் சொல்கிறான். அதற்கு பாக்யாவையே குறை சொல்கிறாள் ஈஸ்வரி. நேத்து அவள் போட்டோவை எடுத்துட்டு வந்து இருக்கலாம்ல.
எதுக்காக அவள் ரெஸ்டாரண்ட்ல விட்டுட்டு வந்த என லாஜிக்கே இல்லாமல் பேசுகிறாள். எழில் கடுப்பாகி அங்கிருந்து எழுந்து போகிறான். இதனிடையில் தன்னை அசிங்கப்படுத்திய பாக்யாவின் அடுத்த ரெஸ்டாரண்ட்டையும் இழுத்து மூட வைக்க பிளான் போடுகிறான் சுதாகர். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.