பிரபல இயக்குநர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம்..!

 
கே.பி. பிள்ளை

மலையாளத்தில் பல்வேறு படங்களை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் கே.பி. பிள்ளை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91

ராணுவத்தில் 21 ஆண்டுகளாக பணியாற்றிய கே.பி. பிள்ளை, 1968-ம் ஆண்டு மேடை நாடகங்களில் கால்பதித்தார். அதை 1970-ல் சினிமாவில் துறைக்குள் பிரவேசித்தார். முதலில் உதவி இயக்குநராக பணியாற்றியவர், 1974-ம் ஆண்டில் ’நகரம் சாகரம்’ என்கிற தன்னுடைய முதல் படத்தை இயக்கினார்.

அதை தொடர்ந்து பாதிரா சூரியன், பிரியசகி, பணிதீராத வீடு போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி, மலையாள திரையுலகில் தனக்கு என்று தனி முத்திரை பதித்தார். முதுமை  காரணமாக சினிமாவை விட்டு விலகி குடும்பத்தினருடன் வசிக்க தொடங்கினார்.

இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று தனது வீட்டிலேயே அவர் மரணமடைந்தார். அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

From Around the web