அப்பா மகன் செய்யும் சதி..சூழ்ச்சி வலையில் சிக்கும் மீனா...!  மீனா கைது செய்யப்படுவாரா ?

 
1

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்டில் தங்கமயிலிடம் போன் போட்டு அவள் அம்மா பேச, உன் புருஷன் பிரச்சனையை எல்லாம் சமாளிச்சியா என கேட்கிறாள். அதெல்லாம் எதுவும் சரியாகலை. அவர் எல்லா விவரமும் கேட்குறார் என சொல்கிறாள். மறந்துட்டேன் சொல்லு என அவள் அம்மா சொல்ல, படிச்ச காலேஜ் எது? வருஷம் எதுன்னு எப்படிம்மா மறந்துட்டேன் சொல்ல முடியும் என கேட்கிறாள் மயிலு. நான் 12 ஆவது வரை தான் படிச்சு இருக்கேன் சொல்ல போறேன் என்கிறாள்.

உடனே அவள் அதெல்லாம் சொல்லாத. உன் புருஷன் கேட்ட, என்ன அப்பாக்கிட்ட தான் எல்லா விவரமும் இருக்குன்னு சொல்லு. அரசி கல்யாண அவசரத்துல அதெல்லாம் கேட்க மாட்டாரு. நீ சீக்கிரம் குழந்தை பெத்துக்கோ. எல்லா பிரச்சனையும் சரியாகிடும் என்கிறாள். தங்கமயில் நீ ஐடியாவே கொடுக்க வேண்டாம் என சொல்லி போனை வைக்கிறாள். இந்தப்பக்கம் சக்திவேல், குமார் இருவரும் மீனாவின் வேலைக்கு எதிராக திட்டம் ஒன்று போடுகின்றனர்.

இதற்காக ஒரு ஆளை ஏற்பாடு பண்ணி அனுப்புகிறார்கள். இந்த விஷயத்துக்கு மீனாவின் ஆபீஸில் வேலை பார்க்கும் ஒருவனும் கெல்ப் பண்ணுகிறான். இதனையடுத்து அவர்கள் பிளான் போட்டப்படி ஒருவன் குடித்தண்ணீர் கனெக்சன் கேட்டு மீனாவிடம் வருகிறான். அவளும் டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி பார்க்கிறாள். அதற்கு பணக்கவர் ஒன்று மறைத்து வைகப்பட்ட்டு இருக்கிறது. அத்தை கையில் எடுத்து பார்த்து கடும் அதிர்ச்சியில் உறைகிறாள்.

என்னங்க இது என கேட்க, அப்போது சரியாக லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து ஆட்கள் வருகின்றனர். நீங்க லஞ்சம் வாங்குனதா புகார் வந்துச்சு. இப்போ நாங்க வரும் போது லஞ்ச பணத்தோட இருக்கீங்க என்கிறார்கள். பணம் கொடுத்தவனும் நீங்க தான் லஞ்சம் கேட்டீங்க என சொல்கிறான். அப்போது ஆபீஸில் இருக்கும் முத்துவேலின் ஆளும் மீனாவுக்கு எதிராக சாட்சி கூறுகிறான். அதற்குள் முத்துவேலின் திட்டத்தின்படி நியூஸ் சேனலில் இருந்து ஆட்கள் வருகின்றனர்.


குமாரும் என்னை அடிச்ச அந்த மீனா ஜெயிலுக்கு போகனும் என வன்மத்தோடு இருக்கிறான். அதனை தொடர்ந்து இரண்டு பேரும் உள்ளே வந்து அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். இதனிடையில் தங்கமயிலுக்கு போன் பண்ணி, அவள் அம்மா மீனா பற்றி நியூஸ் வந்து இருப்பதாக நக்கலாக சொல்கிறாள். இதனால் மயில் பதறியடித்து டிவியை ஆன் செய்ய, கோமதியும் வந்து செய்தியை பார்த்து அதிர்ச்சியடைகிறாள். இப்படியாக இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் நிறைவடைந்தது.

From Around the web