சுதாகருக்கு ஆப்பு : பாக்யாவுக்கு சப்போர்ட் செய்த கோபி..! 

 
1

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் சுதாகரிடம் பணம் கேட்டதால், யாராவது சம்பந்திகிட்ட பணம் கேப்பாங்களா என கோபி, ஈஸ்வரி, செழியன் ரவுண்டு கட்டுகின்றனர். பாக்யா ஒரே போடாக இந்த ரெஸ்டாரண்ட்டுக்காக நான் வாங்குன நாப்பது லட்சம் கடன் இருக்கு. அதுக்கு நான் என்ன பண்றது. நீங்க யாராவது வழி சொல்லுங்க. நான் பணம் வாங்கலை என கேட்கிறாள். இதனை கேட்டு மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

உடனே செழியன் எனக்கு என்ன சொல்றதுனே தெரியலைம்மா என கூற, தெரியலைல. அமைதியா இரு என சொல்லிவிட்டு போகிறாள். அதன்பின்னர் ஈஸ்வரி என்னடா இவ இவ்வளவு கடன் வாங்கி வைச்சு இருக்கா. பண பேய் பிடிச்சுருச்சு போல என சொல்கிறாள். அதற்கு கோபி, பாக்யா என்னம்மா பண்ணுவா. அவ பண்றது சரிதான் என சப்போர்ட் பண்ணி பேசுகிறான். அதன்பின்னர் சுதாகர் அந்தம்மா எவ்வளவு பணம் கேட்டாலும், நம்ம கொஞ்சம் கொடுத்து அனுப்பி விடுவோம் என தனது ஆட்களிடம் சொல்கிறான்.

அதனை தொடர்ந்து அங்கு வரும் பாக்யா, தான் ரெஸ்டாரண்ட் வாங்கிய டாக்குமெண்ட்களை கொடுக்கிறாள். எவ்வளவு பணம் கொடுத்து வாங்கியது. நிலத்தோட விலை எவ்வளவு போன்ற விவரங்களை கொடுக்க, அதில் ரெஸ்டாரண்ட்டுக்கு அறுபது லட்சம் எழுதி இருக்கிறது. அதனை பார்த்து அதிர்ச்சியடையும் சுதாகர், என்னால இவ்வளவு எல்லாம் தர்ற முடியாது சம்பந்தி. இருபது லட்சம் தர்றேன் என்கிறான். அதற்கு பாக்யா, எனக்கு அந்தப்பணம் எல்லாம் வேண்டாம் சார்.

நான் வீட்ல போய் இங்க நடந்தது என்னன்னு சொல்றேன். உங்க மேல வைச்சு இருக்க மரியாதை போயிடும் அவ்வளவு தான் என சொல்கிறாள். உடனே சுதாகர் டபுளா நாப்பது லட்சம் தர்றேன் சம்பந்தி. அவ்வளவு தான் என்னால முடியும் என்கிறான். அதற்கும் பாக்யா, இப்போ இருக்க லேண்ட் வேல்யூ பத்தியெல்லாம் யோசிக்கும் போது என்கிறாள். இதனையடுத்து சுதாகர் ஐம்பது லட்சம் தர்றேன். இதுக்கு மேல என்னால தர முடியாது என சொல்கிறான்.


அதன்பின்னர் பாக்யாவும் சொந்தக்காரன் ஆயிட்டாங்க. சரி எனக்கு ஓகே என சொல்கிறாள். அந்த பணத்தை வைத்து லோனுக்கு கட்ட வேண்டியதை மொத்தமாக அடைக்கிறாள். அதனை தொடர்ந்து தன்னுடைய ரெஸ்டாரண்ட்டில் வேலை பார்த்த அனைவரையும் அழைத்து கொண்டு வீட்டுக்கு வருமாறு செல்வியிடம் சொல்கிறாள். அவளும் அதே போல் அவளும் வர்ற, வாசலிலே நின்று கொள்கிறாள்.


பாக்யாவே வெளியே வந்து அடுத்த வேலை கிடைக்கிற வரைக்கும் உங்களுக்கு இந்த பணம் உதவும் என சொல்லி பணத்தை கொடுக்கிறாள். இதனை பார்த்து எரிச்சலாகும் ஈஸ்வரி அனைவரும் போன பிறகு என்ன பாக்யா இதெல்லாம். நேத்து வர பணம் இல்லன்னு சொன்ன. இன்னைக்கு மொத்த பணத்தையும் அவுங்ககிட்ட தூக்கி கொடுக்கிற என கேட்கிறாள்.

அதற்கு பாக்யா, அவுங்க எல்லாம் என்னை நம்பி இருக்கவங்க. அவுங்களை என்னால கைவிட முடியாது என சொல்லிவிட்டு உள்ளே போகிறாள். உடனே ஈஸ்வரி அவளை பற்றி கோபியிடம் குறை சொல்ல, அவன் பாக்யாவுக்கு சப்போர்ட்டாக பேசி ஷாக் கொடுக்கிறான். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.

From Around the web