விஜய் டிவியில் இருந்து கிளம்பும் கோபிநாத், ப்ரியங்கா..?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் கலர்ஸ் சேனலில் தான் வரும் போல என பார்வையாளர்கள் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மேலும் ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது.விஜய் டிவியின் பிராண்டு அம்பாசிடர்கள் போன்று இருக்கும் நீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத், மாகாபா ஆனந்த், ப்ரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் அந்த டிவி சேனலை விட்டு கிளம்புகிறார்கள் என பேச்சு கிளம்பியிருக்கிறது.
கோபிநாத், ப்ரியங்கா தேஷ்பாண்டே எல்லாம் விஜய் டிவி ப்ராடக்ட்டுகள். அவர்கள் வெளியேற வாய்ப்பே இல்லை என்று நம்பப்பட்டது. இந்நிலையில் கோபிநாத், ப்ரியங்கா தேஷ்பாண்டே, மாகாபா ஆனந்த் ஆகியோர் தங்களுக்கு இத்தனை ஆண்டுகளாக வாழ்க்கை கொடுத்த விஜய் டிவியை விட்டு கிளம்புவது உண்மை தான் என தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜய் டிவியின் முக்கிய மூன்று ஆட்கள் கிளம்புவதற்கு எந்த பிரச்சனையும் காரணம் இல்லையாம். சேனலே கைமாறுவது தான் காரணமாம். அதாவது விஜய் டிவியை வாங்குகிறதாம் கலர்ஸ் சேனல். வாங்கிய பிறகு விஜய் டிவியின் பெயர், லோகோ என அனைத்தையும் மாற்றுகிறதாம்.
மேலும் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு பதில் புது நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து வைக்கப் போகிறதாம். இந்த சேனல் கைமாற்றத்தால் தான் கோபிணா, ப்ரியங்கா அக்கா, மாகாபா ஆனந்த் ஆகியோர் நடையை கட்டுகிறார்களாம்.
விஜய் டிவியில் இருந்து கிளம்பினால் அந்த மூன்று பேரும் எந்த சேனலுக்கு செல்வார்கள் என்பதே கேள்வி. மேலும் காலம் காலமாக விஜய் டிவியில் இருந்து வரும் டிடி அக்கா என்ன செய்யப் போகிறார்?. தங்கிவிடுவாரா இல்லை அவரும் கிளம்பிவிடுவாரா என தெரியவில்லை.
கலர்ஸ் சேனல் ஜியோஸ்டாரிடம் இருக்கிறது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸிடம் இருக்கும் ஜியோஸ்டாரின் ஒரு அங்கமான கலர்ஸிடம் விஜய் டிவி செல்கிறதாம்.