மீண்டும் ஒரு வேதனைப் பதிவை போட்ட ஜி.வி.பிரகாஷ்..!!

 
1

திரையுலகில் நாம் பார்த்த நமக்கு மிகவும் பிடித்த நட்சத்திர ஜோடிகள் பலர் விவாகரத்து அறிவிப்பை அடுத்தடுத்து வெளியிட்டு அதிர்ச்சி தந்து வரும் நிலையில் நேற்று இசையுலகில் அனைவர்க்கும் மிகவும் பிடித்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தங்களது பிரிவு செய்தியை அறிவித்தனர் .

இவர்களின் இந்த பிரிவு செய்தி குறித்து பலரும் பல விதமாக கருத்து கூறி வரும் நிலையில் தற்போது எங்களின் பிரிவு குறித்து வரும் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் ஏற்புடையதல்ல என நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் மீண்டும் ஒரு வேதனைப் பதிவை போட்டுள்ளார்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுது துரதிஷ்டவசமானது.பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.

தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது “யாரோ ஒரு தனிநபரின்” வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா…?

இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம் எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன்.

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி என ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web