நடிகை வனிதாவுக்காக விதிகளை தளர்த்தி உள்ளதா விஜய் டிவி..?
 

 
1

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் என்னை எதிர்பார்க்கலாம் என நடிகை வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு வனிதாவுக்காக விதிகளை தளர்த்தி உள்ளதா விஜய் டிவி என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை ஒரு சீசனில் கலந்து கொண்டவர்கள் அடுத்தடுத்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள முடியாது.

இந்த நிலையில் நடிகை வனிதாவிடம் சில ரசிகர்கள் உங்கள் மகள் ஜோதிகாவை ‘குக் வித் கோமாளி சீசன் 5ல் எதிர்பார்க்கலாமா என்று கேட்டபோது ஜோதிகா தற்போது பிஸியாக இருக்கிறார், அடுத்தடுத்து அவருக்கு அதிகமாக வேலைகள் இருக்கிறது, அதனால் ஜோதிகாவை எதிர்பார்க்க முடியாது, ஆனால் என்னை எதிர்பார்க்கலாம்’ என்று கூறியுள்ளார்.

வனிதாவின் இந்த பதில் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டார் என்பதும் டைட்டில் வின்னர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மீண்டும் அவர் என்னை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளதை அடுத்து போட்டியாளராக வருகிறாரா? அல்லது ஸ்பெஷல் கெஸ்ட் ஆக வருகிறாரா? அல்லது ஆங்கர் ஆக வருகிறாரா என்பதை புரிந்து தான் பார்க்க வேண்டும்.

From Around the web