என்னை கர்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார்..!!விக்ரம் பாடலாசிரியர் மீது பரபரப்பு புகார்..! 

 
1

இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராகவும், அவரது படங்களுக்கு பாடலாசிரியராகவும் பணியாற்றியவர் விஷ்ணு இடவன். இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் லோகேஷிடம் இணை இயக்குநராக பணியாற்றினார். அதுமட்டுமின்றி மாஸ்டர் படத்தில் வரும் ‘பொளக்கட்டும் பற பற’, விக்ரம் படத்தில் வந்த ‘போர்கண்ட சிங்கம்’ மற்றும் ‘நாயகன் மீண்டும் வரான்’ ஆகிய பாடல்களை எழுதியதுள்ளார்.

Vishnu Edavan

தொடர்ந்து, பல்வேறு திரைப்படங்களில் பாடல் எழுதி வளரும் இளம் பாடலாசிரியாராக இருந்து வருகிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் கவின் நடித்துள்ள டாடா திரைப்பத்திற்காகவும் விஷ்ணு இடவன் பாடல்களை எழுதி உள்ளார். இவ்வாறு சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் விஷ்ணு இடவன் சர்ச்சையிலும் சிக்கி உள்ளார்.

அதன்படி இவரும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்த நிலையில் அப்பெண் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் இருவீட்டாரும் இணைந்து திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். 

Vishnu Eduvan

இந்த நிலையில், விஷ்ணு இடவன் அப்பெண்ணைத் திருமணம் செய்ய மறுப்பதாகவும், இதனால் சென்னை திருமங்கலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து அப்பெண் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From Around the web