வெற்றி விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இதோ..!

 
1

லியோ வெற்றி விழாவில் மேடை ஏறிய நடிகர் விஜய் பாட்டு பாடி, நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பிறகு பேசத் தொடங்கிய அவர் வழக்கம் போல குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார்.

அதன்படி, “ஒரு காட்டில் யானை, புலை, மான், காக்கா, கழுகுன்னு நிறைய மருகங்கள் இருந்துச்சு. காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு, இன்னொருத்தர் ஈட்டியோட போய் யானைக்கு குறி வச்சு ஒன்னும் கிடைக்காம திரும்பி வந்தாரு. இதுல யார் வெற்றியாளர்? நிச்சயமா யானைக்கு குறி வச்சவர்தான் வெற்றியாளர். எப்பவும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணுங்க. நம்மளால எதை ஜெயிக்க முடியுமோ அதை செய்வோம். ஜெயிக்க முயற்சி செய்யும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு இடம் இருக்கும். பெருசா கனவு கானணும் நண்பா,” என்று குட்டி ஸ்டோரியை முடித்துக் கொண்டார்.

From Around the web