பிக் பாஸ் நிகழ்ச்சியால் காவல் நிலையம் வரை சென்ற நடிகை மீண்டும் விஜய் டிவியில் எப்படி..?

 
1

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது வருண பகவான் கமெண்ட்டுக்காக தன்னை 8 பேர் கேங் ராகிங் செய்ததாக புகார் தெரிவித்தார் மதுமிதா. இந்நிலையில் குக் வித் கோமாளி 6 ப்ரொமோ வீடியோவில் போட்டியாளர்களில் ஒருவராக மதுமிதாவை காட்டியதும் பார்வையாளர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி, சேனல், கமல் ஹாசன் பற்றி அப்படி பேசிய பிறகும் மதுமிதா எப்படி விஜய் டிவி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்?. சேனல் எப்படி அவரை குக்காக தேர்வு செய்தது என பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


பிக் பாஸ் சர்ச்சைக்கு பிறகு எங்கும் செல்லாமல் வீட்டோடு முடங்கினார் மதுமிதா. கோவில்களுக்கு மட்டும் சென்று வந்தார். இந்நிலையில் நடந்தது நடந்துவிட்டது என அதை எல்லாம் மறந்து குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சிக்கே மதுமிதாவை அழைத்தார்களாம். ஆனால் என்னால் வர முடியாது என கூறிவிட்டாராம்.


இதையடுத்து 6வது சீசனுக்காக மீண்டும் அழைக்கவே நடந்ததையே நினைத்துக் கொண்டிருப்பது சரி அல்ல என தேடி வந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டுவிட்டாராம் மதுமிதா.


பிக் பாஸ் சர்ச்சை பற்றி முன்பு செய்தியாளர்களிடம் மதுமிதா கூறியதாவது,


பிக் பாஸ் போட்டியாளர்கள் வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைப்பது போன்று கருத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. வருண பகவானும் கர்நாடாகத்தை சேர்ந்தவரோ, மழை ரூபத்தில் கூட தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மறுக்கிறார் என்று கூறினேன். மனதில் பட்டதை சொன்னதற்கு அரசியல் பேசாதீர்கள் என்றார்கள். சேரன் சாரும், கஸ்தூரியும் தான் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். நான் சொன்ன விஷயத்தை 8 பேர் அரசியலாக்கினார்கள்.


அரசியல் பேசாதீங்க. அதை ஒளிபரப்ப மாட்டோம் என சேனலில் இருந்து கடிதம் கிடைத்தது. இதில் அரசியல் எங்கே இருக்கிறது?. 8 பேர் என்னை ராகிங் செய்ததால் மனதளவில் பாதிக்கப்பட்டு கையை அறுத்தேன் என்றார்.

From Around the web