என் கணவர் நடிகர் என்பதே எனக்கு தெரியாது - மனைவியை அதிர வைத்த மம்மூட்டி..!

மம்மூட்டியின் மனைவி சுல்ஃபத் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சினிமா படங்கள் பார்க்கக் கூடாது என கறாராக இருந்த குடும்பத்தில் பிறந்தவர் சுல்ஃபத். இந்நிலையில் பெரியவர்களாக பார்த்து அவருக்கும், மம்மூட்டிக்கும் கடந்த 1979ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார்கள்.
மம்மூட்டி ஒரு நடிகர் என்பது சுல்ஃபத்துக்கு தெரியாது. அவரை பொறுத்தவரை மம்மூட்டி ஒரு வக்கீல். திருமணமான பிறகு தன் மனைவியிடம் நான் ஒரு வக்கீல் மட்டும் அல்ல நடிகனும் கூட என கூறியிருக்கிறார் மம்மூட்டி. அதை கேட்ட சுல்ஃபத்தோ பொய் சொல்லாதீங்க, நான் நம்ப மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.
திருமணத்திற்கு முன்பு சிறு சிறு கதாபாத்திரங்களில் அதுவும் சாஜன் என்கிற பெயரில் நடித்து வந்தார் மம்மூட்டி. திருமணமான பிறகு Mela என்கிற படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதையடுத்து என் மனைவி ஷூட்டிங் பார்த்ததே இல்லை அவரை என்னுடன் அழைத்து வரலாமா என இயக்குநரிடம் கேட்டிருக்கிறார் மம்மூட்டி.
தாராளமாக அழைத்து வாங்க என இயக்குநர் சொன்னதும் சுல்ஃபத்தை ஷூட்டிங்கிற்கு கூட்டிச் சென்றார். அதன் பிறகே தன் கணவர் ஒரு நடிகர் என்பதை நம்பியிருக்கிறார் சுல்ஃபத். படம் கூட பார்க்கவிடாத குடும்பத்தில் இருந்து வந்தாலும் நடிகரான தன் கணவருக்கு ஃபுல் சப்போர்ட் செய்தார் சுல்ஃபத்.
திருமணத்திற்கு பிறகு வக்கீல் வேலையை விட்டுவிட்டு முழுநேரம் நடிகனாக முடிவு செய்தார் மம்மூட்டி. அப்பொழுது அவருக்கு பக்கபலமாக நின்றது சுல்ஃபத் தான். அது மட்டும் அல்ல ஒரு கட்டத்தில் மம்மூட்டியை ஒரு இளம் நடிகையுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கள் வந்தன. அதை சுல்ஃபத் நம்பவே இல்லை.
மம்மூட்டியோ விளக்கம் கொடுத்து முடியாது என படப்பிடிப்புகளுக்கு தன் மனைவியை தொடர்ந்து அழைத்துச் சென்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.