குழந்தை இல்லாதவரை தொட்டேன், அவர் மனைவி கர்ப்பமாகிட்டார்..!

பாலிவுட் பிரபலங்களின் வீட்டு பார்ட்டிகளில் தவறாமல் கலந்து கொண்டு வருபவர் ஓரி. நீங்கள் யாரென்று கேட்டால் நான் ஒரு லிவர் என சொல்கிறார். பாலிவுட் பிரபலங்கள் மட்டும் அல்ல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் ஓரியை கண்டிப்பாக பார்க்கலாம்.
ஓரி தொட்டால் தங்கள் உடல் உபாதைகள் தீர்ந்து, இளமையாக காணப்படலாம் என பிரபலங்கள் நம்புகிறார்களாம். இந்நிலையில் பேட்டி ஒன்றில் ஓரி கூறியதாவது,
திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எனக்கு பணம் கொடுக்கிறார்கள். நான் தொட்டால் இளமையாக ஆவதாக உணர்கிறார்கள். எனக்கு அதீத சக்தி இருக்கிறது என நான் சொல்லவில்லை. அதே சமயம் மக்கள் அப்படி நம்புவதை நான் தடுக்கவில்லை.
ஒருவர் திருமணமாகி 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தார். அவர் என்னை சந்திக்க வந்தார். நான் அவரை தொட்ட பிறகு மூன்று மாதங்கள் கழித்து அவரின் மனைவி கர்ப்பமானார்.
தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க நான் தான் காரணம் என அந்த நபர் என்னிடம் தெரிவித்தார். இது எதேச்சையாக நடந்திருக்கலாம். ஆனால் அவர் என்னிடம் சொன்னதை தான் நான் உங்களிடம் சொல்கிறேன் என்றார்.
ஓரியின் பேட்டியை பார்த்தவர்கள் அவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,
ஓரியும், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலாவும் ஒன்று. இரண்டு பேருமே கவனத்தை ஈர்க்க சம்பந்தமே இல்லாமல் எதையாவது சொல்வார்கள். ஓரி ஒரு ஆணை தொட்டதால் அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது என்பது முட்டாள்தனமானது.
ஓரி தொட்டால் தாங்கள் இளமையாக இருப்பதாக இந்த பிரபலங்கள் நம்புவது சரியல்ல. இதன் மூலம் அவர்களின் ரசிகர்களும் ஓரியை நம்பத் துவங்கிவிடுவார்கள். பெரிய இடத்து ஆட்களுடன் நட்பாக இருந்து கொண்டு இந்த ஓரி செய்யும் செயல்களை எல்லாம் ஏற்க முடியாது.
ஒருவர் தொட்டால் இளமையாகிவிடலாம் என்றால் இந்த பிரபலங்கள் எல்லாம் ஏன் இளமையாக தெரிய ஏகப்பட்ட சிகிச்சை மேற்கொள்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னதாக ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரி அங்கு வந்திருந்த பிரபலங்களை தொட்டபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருந்தார். அவர் பிரபலங்கள் மீது கை வைத்த இடத்தை பார்த்தவர்கள் ஓரியை விமர்சித்தார்கள். இந்நிலையில் மீண்டும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.