விரைவில் துவங்கும் நானே வருவேன் பட படப்பிடிப்பு..!

 
நானே வருவேன்

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ பட  படப்பிடிப்பு துவக்க பணிகள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்தி நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். முன்னதாக ஹாலிவுட்டில் தயாராகியுள்ள ‘தி கிரே மேன்’ முதலாம் பாகத்தில் நடித்து முடித்தார்.

இந்தியில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அத்ரங்கி ரே’ படம் விரைவில் ஓடிடியில் வெளியாகிறது. இந்த வரிசையில் சகோதரர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்குகிறது. 

ஏற்கனவே இந்த படத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டது. அப்போதே படத்திற்கான முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டது. அப்போது நடிகர் தனுஷ் தி கிரே மேன் படத்தின் நடிக்க சென்றுவிட்டார். அதனால் படப்பிடிப்பு பணிகளை துவங்க முடியவில்லை.

நானே வருவேன் பட வேலைகள் துவங்கிய போது வேறு கதையை செல்வராகவன் இயக்குவதாக இருந்தார். ஆனால் கதை விவகாரத்தில் சகோதரர்களுக்கு இடையில் கருத்து மாறுபாடு எழுந்தது. அதனால் இப்போது கதையையும், படத்தின் தலைப்பும் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி செல்வராகவன் இயக்கும் தனுஷ் இணையும் படம் மூன்று அண்ணன் தம்பிகளை மையப்படுத்தி உருவாகவுள்ளதாகவும், அதன்படி படத்துக்கு ‘ராயன்’ என்று தலைப்புவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

From Around the web