இந்த தேதியில் பாலிவுட் ஸ்டார் சல்மான் கானை போட்டுத் தள்ளிடுவேன்... கொலை மிரட்டல் விடுத்த ராக்கி பாய்!

 
1

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்து உள்ளது. அதில் பேசிய நபர் தன்னை ராக்கி பாய் என அறிமுகப்படுத்தி கொண்டு, ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் இருந்து பேசுகிறேன் என கூறியுள்ளார். மேலும், வருகிற 30-ம் தேதி நடிகர் சல்மான் கான் கொலை செய்யப்படுவார் என மிரட்டல் விடுத்து உள்ளார். 

Salman Khan

இதனை தொடர்ந்து பரபரப்படைந்த மும்பை போலீசார், தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர். இதனிடையே மும்பை பாந்திரா பகுதியில் வசித்து வரும் சல்மான் கான் அலுவலகத்திற்கு கடந்த மாதம் 18-ம் தேதி ரோகி கார்க் என்பவரிடம் இருந்து இ-மெயில் ஒன்று வந்தது. அந்த இ-மெயிலில் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டு இருந்தது.

அதில், சமீபத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டியை சல்மான்கான் பார்க்க வேண்டும். கோல்டி பாய் (கோல்டி பிரார்) இந்த பிரச்சனையை முடிக்க சல்மான்கானுடன் நேருக்கு நேர் பேச விரும்புகிறார். இன்னும் நேரம் உள்ளது. நேரம் கடந்தால் நீங்கள் அதிர்ச்சியான ஒரு சம்பவத்தை பார்க்க நேரிடும் என கூறப்பட்டு இருந்தது.

Salman Khan

இதனை தொடர்ந்து, நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அவரது நடிப்பில் கிஸி கா பாய் கிஸி கா ஜான் என்ற படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வருகிற 21-ம் தேதி நாடு முழுவதும் வெளிவர திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு வந்து உள்ளது.

From Around the web