இந்தியாவை நான் இந்தியாவாக பார்த்துக்கொள்வேன்…பாரத் என்பதை மறந்துவிடுங்கள்..!

 
1

திருப்பூர் பாண்டியன் நகரில் நடைபெற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 17வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனரும் தலைவருமான சரத்குமார் பேசுகையில் சமத்துவ மக்கள் கட்சி 2026ல் தேர்தலில் தனித்து போட்டியிடுவது நிச்சயம் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு உண்டு என சொல்லிருந்தார்..

நான் பார்த்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி தான்…சிறந்த தேர்தல் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று சொல்லும் ஒரே கட்சி சமத்தவ மக்கள் கட்சி மட்டும் தான். இலவசம் என்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் பிரச்சினைகளை சமத்துவ மக்கள் கட்சியினர் மற்றும் மக்கள் அந்தந்த ஆட்சியர் அலுவலகங்களில் பிரச்சினை குறித்து புகார் தெரிவிக்க வேண்டும்.

வரும் காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் மாற வேண்டும் தேர்தல் நேரங்களில் பொதுமக்கள் வாக்குக்காக அரசியல் கட்சியினரிடம் பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும் அப்போது தான் ஆட்சி மாறும். மக்களின் வாழ்வாதரம் பொருளாதாரம் மாறும்…இப்படி ஒரு முடிவிற்கு தயவு செய்து வாங்க அனைவரும் சமத்துவ மக்கள் கட்சியை நம்புங்கள்….

அனைவரது மனதிலும் இந்தியா என்ற பெயர் பதிவாகியுள்ள நிலையில் அதனை பாரத் என்று மாற்றம் செய்வது தேவையில்லாத வேலை. இதை ஆதரிப்பது சரி அல்ல…ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் உள்ள சட்ட சிக்கல்களை சரிசெய்துவிட்டு இத்திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்…முன்னாள் முதல்வர் கருணாநிதியும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்றிருந்தார் என்று தெரிவித்துள்ளார்.

From Around the web