பற்ற வைத்த பயில்வான்..கருத்தடை மாத்திரை எடுத்த சமந்தா! கல்யாணத்துக்கு முன்பே சோபிதா...

பயில்வான் ரங்கநாதன் நாக சைதன்யாவின் இரு மனைவிகள் குறித்து யூடியூப் சேனலில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நாக சைதன்யா குடும்பத்தில் அனைவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 2ம் திருமணம் செய்தவர்கள் தான். நாகார்ஜூனாவும் தொழிலதிபர் மகளை திருமணம் செய்து குழந்தை பிறந்த பிறகு விவாகரத்து பெற்றார். அதன்பின் தான் நடிகை அமலாவை கல்யாணம் செய்தார்.
அதேபோல அவரது மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் நடிகையாக இருந்த சமயத்தில் பல நடிகர்களுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். தமிழ் கிருஸ்தவப் பெண்ணாக இருந்தாலும், நாக சைதன்யாவிற்காக இந்துவாக மாறி திருமணம் செய்துகொண்டார்.
நாக சைதன்யாவுக்கு 2000 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. இதனால், நடித்து சம்பாதித்து தான் வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமில்லை எனக் கூறிய பின்னும் சமந்தா நடிக்கத்தான் செல்வேன் என்றார்.
இதற்கு சைதன்யாவின் குடும்பம் ஒப்புக் கொண்டது. இதனால், சமந்தா அடிக்கடி கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டார். இது அவர்களது குடும்பத்திற்கு தெரிந்து பிரச்சனை ஆன போதும், கொஞ்சநாளுக்கு பின் குழந்தை பெற்றுக் கொள்வதாக கூறினார். அதையும் அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் ஒப்புக் கொண்டனர்.
ஆனால், அவர் புஷ்பா படத்திற்காக ஆடிய பாடலில் பயங்கர கிளாமராக ஆடியதால், பலரும் நாகார்ஜூனாவை கேள்வி கேட்டனர். இந்த பிரச்சனை வெடித்த பிறகே சமந்தா விவாகரத்து பெற்றார்.
இப்போது, நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சோபிதா துலிபாலாவும் ஏப்ப சாப்பை கிடையாது. அவர், முன்னணி தெலுங்கு வில்லன் நடிகர் துலிபாலாவின் மகள். சினிமாவில் தற்போது சில ஆண்டுகளாக நடித்து வருகிறார்.
இவர், நாக சைதன்யாவை காதலித்ததற்கு முன் வேறொரு தொலிழதிபரை காதலித்து வந்துள்ளார். பிரணவ் மிஷ்ரா எனும் தொழிலதிபரை காதலித்து வந்த அவர் லிவிங் டு கெதர் ரிலேஷன்சிப்பிலும் வாழ்ந்து வந்தார். பின் அவர்களுக்கு பிரேக்கப் ஆனதால் தான் இவர் நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்தார். இந்த விவகாரம் குறித்து ஆந்திர பத்திரிகைகள் பல செய்திகளை வெளியிட்ட போதும், சைதன்யா குடும்பம் அதைக் கண்டுகொள்ளவே இல்லை.
சமந்தா கவர்ச்சியாக நடித்ததாக சொல்லும் அளவிற்கு அதிகமாக சோபிதாவும் கவர்ச்சி காட்டுவார். டைரக்டர் 80% கேட்டால் சோபிதா 90% கவர்ச்சியை காட்டி நடிப்பார். இதனால், மீண்டும் நாக சைதன்யா குடும்பத்தில் சோபிதாவால் தலைவலி ஏற்படும் என சொல்லப்படுகிறது என பயில்வான் பேசி பற்றவைத்துள்ளார்.