பிரபல நடிகர் பெயரில் தன் ரூ. 72 கோடி சொத்தை எழுதி வைத்த ரசிகை..!

 
1

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்தி தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான லியோ படத்தில் தளபதிக்கு அப்பாவாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சஞ்சய் தத். அதில் இருந்து அவரை விஜய் அப்பா என்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு சஞ்சய் தத்துக்கு போன் அழைப்பு வந்தது. எடுத்து பேசியபோது மறுமுனையில் போலீசார் பேசியிருக்கிறார்கள். உங்களின் தீவிர ரசிகையான நிஷா பாட்டில் இறந்துவிட்டார். அவர் தனது ரூ. 72 கோடி சொத்தை உங்கள் பெயரில் எழுதி வைத்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.

நிஷா பாட்டில் வங்கிக்கும் கடிதம் எழுதி தன் பெயரில் இருக்கும் பணத்தை எல்லாம் சஞ்சய் தத்தின் கணக்கிற்கு மாற்றிவிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். போலீசார் சொன்னதை கேட்ட சஞ்சய் தத் ஆச்சரியப்பட்டார். இருந்தாலும் ரூ. 72 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏற்க மறுத்துவிட்டார் அவர். இறந்தவர் யாரென்றே எனக்கு தெரியாது. அவரின் சொத்துக்கள் எனக்கு வேண்டாம் என போலீசாரிடம் கூறிவிட்டார் சஞ்சய் தத்.

ஒரு ரசிகை தனக்கு பிடித்த நடிகரின் பெயரில் ரூ. 72 கோடி சொத்தை எழுதி வைத்திருக்கிறாரே. அப்படி என்றால் அவருக்கு சஞ்சய் தத் மீது எவ்வளவு பாசம் இருந்திருக்க வேண்டும். நமக்கு இப்படியொரு ரசிகை கிடைக்க மாட்டாரா என சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.

From Around the web