அரசியல்' குடும்பத்து வாரிசை திருமணம் செய்து கொண்டாரா ப்ரியங்கா தேஷ்பாண்டே..?

 
1

ப்ரியங்காவின் திருமண புகைப்படங்கள் வெளியானதுமே வசி சச்சி யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் கூகுள் செய்யத் துவங்கினார்கள்.

இந்நிலையில் மாப்பிள்ளை வசி இலங்கையை சேர்ந்தவர் என்றும், அங்குள்ள அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தவர் இரா. சம்பந்தன். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தன் 91வது வயதில் காலமானார்.

2001ம் ஆண்டில் இருந்து சாகும் வரை எம்.பி.யாக இருந்த பெருமைக்குரியவரான இரா. சம்பந்தனின் தங்கச்சி மகன் தான் இந்த வசி சச்சி என செய்திகள் வெளியாகியிருக்கிறது. அரசியல் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வசியின் கவனம் வேறு பக்கம் இருக்கிறது.

இந்நிலையில் வசியின் பின்னணி குறித்து அறிந்தவர்களோ, ப்ரியங்கா அக்கா பெரிய இடத்து மருமகளாக தான் சென்றிருக்கிறார். இன்று போன்று என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் அக்கா. திருமண புகைப்படங்களில் உங்களின் முகத்தில் இருந்த சந்தோஷம் கடைசி வரை நிலைத்து இருக்கட்டும் என வாழ்த்துகிறார்கள்.
 

வசி சச்சி வந்த நேரத்தில் ப்ரியங்கா தேஷ்பாண்டேவின் முன்னாள் கணவரான பிரவீன் குமார் பற்றி சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள். பிரவீன் குமாரின் மனைவியாக இருந்தபோது அவர் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பெருமையாக பேசி கண் கலங்கினார் ப்ரியங்கா. அந்த வீடியோவை தற்போது ஷேர் செய்து பிரவீனை பிரிய காரணம் என்ன என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

From Around the web