பழிவாங்கும் கதை தான் ‘ராயன்’ படமா? பரபரப்பு தகவல்..!
நடிகர் தனுஷ் தனது 50வது திரைப்படமான ‘ராயன்’ படத்தை அவரே இயக்கி உள்ள நிலையில் இந்த படத்தை அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பிரமாண்டமாக நடந்த இசை வெளியீட்டு விழா மற்றும் அடுத்தடுத்து வெளியாகி வரும் சிங்கிள் பாடல் ஆகியவை இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், வெளிநாட்டில் உள்ள ஒரு திரையரங்கில் இந்த படத்தின் கதை சுருக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த கதை சுருக்கத்தில் ’தன்னுடைய குடும்பத்தை கொலை செய்த கும்பலை பழி வாங்குவதற்காக கிளம்பும் ஒரு இளைஞரின் கதை தான் இந்த படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பார்க்கும் போது பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெளியான படத்தின் கதைதான் ‘ராயன்’ கதை என்றும் பல படங்களில் அடிச்சு தொளிச்ச கதையை தான் தனுஷ் தேர்வு செய்து உள்ளாரா என்றும் கமெண்ட்டுகள் பதிவாகி வருகிறது.
ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே வெளியான பல படங்களின் கதையாக இருந்தாலும் தனுஷ் தனது மேக்கிங்கில் மிரட்டி இருப்பார் என்றும் நிச்சயம் அவர் ‘ராயன்’ படத்தை வித்தியாசமாக உருவாக்கி இருப்பார் என்றும் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.